இசெட் புள்ளி பிரச்சினை தொடர்பில் 2011ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மாலையில் இசட் புள்ளி பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பிற்கு இணங்க இம்முறை பல்கலைக்கழகத்திற்கு அதிகளவான மாணவர்களை உள்வாங்கவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை 2012ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்நி பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களை இவ்வாண்டு இறுதிக்குள் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.