அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Saturday, February 16, 2013

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம்: கல்வி சமூகத்திற்கு மற்றுமொரு மைல்கல்!


எம்.ஏ. பகுர்தீன்
கிழக்கு வாழ் மக்களின் நீண்ட கால கனவாக இரு ந்த தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் "பொறியியல் பீடத்தை" ஒலுவில் வளாகத்தில் திறந்து வைத்ததன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்பகுதி வாழ் கல்விமான்கள், புத்திஜீவிகள் மத்தியில் மற்றுமொரு புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெப்ரவரி 5ம் திகதி ஒலுவில் வளாகத்தில் அமை ந்துள்ள "பொறியியல் பீடத்தை" வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள், மாகாண அமைச் சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முதன் முதலாக இப்பல்கலைக் கழகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களுக்கு பல்கலைக்கழக சமூகம் செங்கம்பள வரவேற் பொன்றை அளித்தது. ஜனாதிபதி யின் வருகையையொட்டி பல்கலைக் கழகம் முற்றாக நன்கு அலங்கரிக்கப் பட்டதோடு அவர் ஹெலிகொப்டரிலி ருந்து ஒலுவிலில் இறங்கினார்.

ஒலுவில் வளாகம் வரை அலங்காரப் பந்தல்களும் பதாதைகளும் தோரணங் களும் அமைக்கப்பட்டிருந்தன. ஒலு வில் வளாக உள்ளக வீதிகளும் சிற ந்த முறையில் செப்பனிடப்பட்டிருந்தன.

1995 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 26ம் திகதி 88/9ம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரிச்சட் பத்திர ணவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக் கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டது. இப்பகுதி வாழ் கல்விமான்கள், புத்திஜீவிகள் இங்கு பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் இந்த முயற்சிக்கு உயிரூட்டி உருவம் கொடுத்தவர் மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹ¥ம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களே! இப்பல்கலைக்கழக கல்லூரியின் ஸ்தாபக உபவேந்தராக பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் பதவி வகித்தார்.

1995ஆம் ஆண்டு ஒக்டோ பர் மாதம் 1992/93ஆம் ஆண்டு 33 மாணவர்களோடு ஆரம்பிக்கப்பட்ட இப் பல்கலைக் கழகம் கல்வி மற்றும் உயர் கல்வி அமை ச்சின் மார்ச் 1996 ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தல் 916/7யின் பிரகாரம் தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கல்லூரி இலங்கையின் 10 வது தேசிய பல்கலைக்கழகமாக உருவெடுத்தது.


இன்று இப்பல்கலைக் கழகம் நான்கு பீடங்களோடு மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது. தற்போது இங்கு 2100 உள்வாரி மாணவர்களும் 7000 வெளிவாரி மாணவர்களும் தமது உயர் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர்.

சகல வசதிகளையும் கொண்ட பெளதீக வளங்கள், சிறப்பான சூழல் போன்றவைகளை உள்ளடக்கிய இந்தப் பல்கலைக்கழகம் தற்போது ஐந்தாவது பீடமான பொறியியல் பீடத்தை ஆரம்பித்துள்ளமை இப்பகுதி வாழ் மக்களுக்கு தமது குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த ஒரு நல்ல தருணமாகும்.

தென்கிழக்கு வாழ் மக்களின் மிக நீண்ட நாளைய கனவாக இந்த பொறி யியல் பீடம் இருந்து வந்தது. கல்வி வசதிகள் சகலருக்கும் சகல வசதிகளுட னும் வழங்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் "மஹிந்த சிந்தனை" கோட்பாட்டுக் கமைவாக உருவாக்கப்பட்ட இந்த "பொறியியல் பீடம்" தற்போதைய உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். மொகமட் இஸ்மாயில் அவர்களின் இடைவிடா முயற்சியின் பயனாகும்.

உபவேந்தர் கலாநிதி இஸ்மாயிலுக்கு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முன் னாள் தலைவர் பேராசி ரியர் காமினி சமரநாயக்கா, வேந்தர் பேராசிரியர் அச்சி மொகமட் இஷாக் ஆகியோர் பக்கபலமாக இருந்தனர். இதேபோன்று பதிவாளர் எச். அப்துல் சத்தார், பொறியியலாளர் எஸ்.எம். சித்தீக் ஆகியோர் அவருக்கு தோளோடு தோள் நின்று உழைத்தனர். இவ்வாறு அரும் பேறாகக் கிடைத்த இந்த "பொறியியல் பீடம்" இப்பகுதி இளைஞர்கள் தமது பொறியியல் துறையில் உயர் கல்வியைப் பெறுவத ற்கு ஒரு நல்ல வாய்ப்பை அளித் துள்ளது.

இந்த வாய்ப்பைப் பெறு வதற்கு அங்கீகாரம் வழங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு கிழக்கு வாழ் மக்கள் தமது உளமார்ந்த நன்றியைத் தெரி வித்துக்கொள்வதோடு ஜனாதிபதியை என்றும் தமது நெஞ்சில் பதித்துள்ளர். இதன் வெளிப்பாடே ஜனாதிபதிக்கு இப்பகுதி மக்கள் அளித்த மகத்தான வரவேற்பாகும்.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு ஒலுவில் வளாகத்தைச் சூழவுள்ள பாதைகள் எங்கும் தோரணைகளால் அலங்க ரிக்கப்பட்டமை, ஒலுவில் வளாகத்தில் விசேடமாக அமைக்கப்பட்ட அலங்காரப் பந்தல் மக்கள் வெள் ளத்தால் வழிந்தோடியமை, சிறுவர் முதல் பெரியோர் வரை உற்கமாகக் கலந்து கொண்டமை, வெளி மாவட்டங்களிலிருந்தும் பெருந்தொகையிலான பெற்றோர்கள் பிரசன்னமாயிருந்தமை ஆகியன இந்த அங்குரார்ப்பண வைபவத்தின் வெற்றிக்குக் காரணமாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் வருகை தந்த அமைச்சர்கள் எஸ்.பி. திஸாநாயக்க, ஏ.எல்.எம். அதாஉல்லா, றவூப் ஹக்கீம், பீ. தயாரத்ன, மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர பிதாக்கள், பிரதேச சபைத் தலைவர்கள் ஆகியோர்களுக்கு பல்கலைக்கழக சமூகம் என்றுமில்லாத மகத்தான வரவேற்பை அளித்தது. வரவேற்பின் போது அளிக்கப்பட்ட கலாசார நிகழ்வுகள் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

"பொறியியல் பீடத்தை" முதலில் திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் இஸ்லாமிய கற்கை நெறிகள் அறபு மொழி பீடம், மருத்துவ நிலையம், மாணவர் பொழுது போக்கு நிலையம் ஆகியவைகளுக்கான கட்டடத் தொகுதிகளையும் திறந்து வைத்தார்.

சகல வசதிகளையும் உள்ளடக்கிய இக்கட்டத் தொகுதிகளுக்கு குவைத் நாட்டின் அறபு அபிவிருத்தி நிதியம் நிதியுதவியை வழங்கியிருந்தது. இப்பல்கலைக்கழகத்துக்கு முதல் விஜயமாக அமைந்த ஜனாதிபதியின் இந்த வருகையின் போது இங்கு கலை வடிவமைப்போடு கம்பீரமாகக் காட்சியளிக்கும் கட்டடத் தொகுதிகள் அன்னாரின் முழுக்கவனத்தையுமே ஈர்த்தமை குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.

source - thinakaran