அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே


பரீட்சைக்கு படிப்பதும் தயாராகுவதும்!

கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்

சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !

சிக்கல்கள் இல்லாமல் சிகரத்தை அடைந்தவர்கள் யாருமில்லை. சரித்திரம் படைத்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல சோதனைக் கதைகள் இருக்கின்றன.

அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் – கலாநிதி சுக்ரி

அரபுத் தமிழின் தோற்றத்திற்குஅடிப்படையாக அமைந்த வரலாற்றுக் காரணிகளை நாம் விளங்குதல் அவசியமாகும்.

ஒரு குழந்தை உருவாவது முதல் பிரசவிக்கப்படும் வரை..

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம்

3D MEDICAL ANIMATION

Vaginal Childbirth (Birth) animation video

QUESTION BANK க்கான பட முடிவு

GCE/AL EXAMINATION

QUESTION BANK


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Monday, April 30, 2012

பரீட்சைகளின் போது உதவும் மனப்பயம்


கடந்த கால புதிய ஆய்வுகளிலிருந்து மனப்பயமானது மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, பரீட்சைகளின் போது இறுதி நேரம் கற்கும் விடயங்கள் ஞாபகத்தில் இருப்பது கண்டறியப்பட்டள்ளது.
மன வழுத்தம் ஏற்படும் போது ஹார்மோன்கள் அதிகளவில் எமது மூளையில் உற்பத்தி செய்யப்படுகின்றது.இதனால் மூலையின் ஞாபக சக்தியின் அளவு அதிகரிக்கப்படுகின்றது.
பேராசிரியர்களின் கருத்துப் படி மனவழுத்தம் ஏற்படும் போது மாணவர்கள் கல்வி கற்கும் போது அந்த விடயங்கள் மனதில் இலகுவாக பதிந்து விடுகின்றது.

அந்த நேரத்தில் சுரக்கும் ஹோமோன்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கின்றன என கூறப்படுகிறது.உதாரணமாக, எமது வாழ் நாளில் தினமும் பல விதமான சம்பவங்கள் நடைபெறுகின்றன.
சந்தோஷமான நிகழ்வுகளும் நடைபெறும், கவலையான சம்பவங்களும் இடம்பெறும். அவ்வாறான சம்பவங்களில் எமது மனதை அதிகளவில் பாதித்த அல்லது காயத்தை ஏற்படுத்திய சம்பவங்களே எமக்கு எப்போதும் ஞாபகத்தில் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் மனவழுத்தமாகும்.

பரீட்சை கால இறுதி நேரங்களில் கற்கும் விடயங்கள் எமக்கு எப்போதும் ஞாபகம் இருக்கும்.இதற்கு காரணம் பரீட்சை நெருங்கி விட்டது சிறந்த பெறுபேறு பெற வேண்டும் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என மனம் எண்ணும்.அப்போது எங்கள் முழு கவனமும் பாடங்களிலேயே பதிந்திருக்கும்.

மனவழுத்தம் பயன் தரும் என கருதினாலும், அதிகளவிலான மனவழுத்தம் உடல் நலத்திற்கு கேடு என்பதை நாம் ஞாபகம் வைத்திருக்க வேண்டும்

பரீட்சைகளின் போது உதவும் மனப்பயம்


கடந்த கால புதிய ஆய்வுகளிலிருந்து மனப்பயமானது மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, பரீட்சைகளின் போது இறுதி நேரம் கற்கும் விடயங்கள் ஞாபகத்தில் இருப்பது கண்டறியப்பட்டள்ளது.

பாடசாலைக் கல்வியில் முஸ்லிம்கள்

(இலங்கையில் முஸ்லிம் கல்வி) 
ஒரு பாடசாலையின் கல்வி மேம்பாடு நான்கு அடிப்படைக் காரணிகளின் சுமூகமான பங்குபற்றுதலிலேயே தங்கியுள்ளன. ஆசிரியரின் பாத்திரம், பெற்றோரின் பங்கேற்பு, தலைமை ஆசிரியரின் முகாமைத்திறன், வெளியிலுள்ள நிருவாகத்தின் மேற்பார்வையும் வள ஒதுக்கீடும் இதில் பிரதானமானவை.
முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங் களை நிரப்ப உள்ள ஒரே வழி கல்வியில் கல்லூரிகளில் முஸ்லிம் பயிற்சி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே. இதேவேளை உள்ளக முகாமைத்துவத் திறன்களும் அதகரிக் கப்பட வேண்டும். கல்வி நிருவாக சேவையில் சித்தியடைந்த அநேக முஸ்லிம் அதிகாரிகள் எமது கல்வி மேம்பாட்டில் பங்க ளிக்க முடியும். இதில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் ஒரு பொறுப்புள்ளது.
வெளியக வினைத்திறனுள்ள மேற்பார்வையை உறுதி செய்ய முஸ்லிம் பாடசாலைத் தொகுதிகளை உள்ளடக்கிய வலயங்களும் வலயக் கல்விப் பணிப்பாளர்களும் நியமிக்கப்பட வேண்டும். கோட்டக் கல்விப் பணிப்பாளர்,ஆலோசகர்களின் பணி மேலும் வினைத்திறனுள்ளதாக மாற்றப்பட வேண்டும்.
முஸ்லிம்களின் கல்விப் பின்னடைவுக்கான காரணிகளை தனித் தனியாக ஆராய்ந்து தீர்வு காண்பது கடினம். ஏனெனில் இக்காரணிகள் பல்வேறு தரப்பினர்களுடன் தொடர்புற்றதாகவும் ஒன்றோடொன்று இணைந்ததாகவும் இருக்கின்றது. எனவே, முஸ்லிம் கல்வியில் முக்கியமாக சுட்டிக் காட்டப்படும் சில அவதானங்களே இங்கு சுருக்கமாக முன்வைக்கப்படுகின் றது.

1 கல்விக்கு இஸ்லாம் வழங்கியுள்ள முக்கியத்துவத்தை முஸ்லிம் கள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்வில்லை. இதனால் கல்வி இயல்பாகவே பாதிக்கப்படுகின்றது.
2.மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலான தொழில் வாய்ப்புக்களின் பால் இளைஞர்களின் கவனம் வெகுவாக ஈர்க்கப்படுகின்றமை.
3.இலங்கையில் பொதுவாக நிகழும் பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினை கல்வி பற்றிய மனப்பாங்கில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்.
4.தேசியக் கல்விக் கொள்கையின் குறைபாடுகள்.
5.முஸ்லிம் மாணவர்களை கல்வியில் ஊக்குவிக்கக் கூடிய வழி காட்டல் முயற்சிகள் நிறுவனமயமாகாமல் இருத்தல்.
6.வழிகாட்டல் முயற்சிகள் நிறுவனமயமாகாமல் இருத்தல்.
7.முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்கும் பொருளாதார வளப் பற்றாக்குறை.
8.நிரப்பப்படாமலுள்ள ஆசிரியர் மற்றும் உயரதிகாரிகளின் வெற்றிடம்.
9.பெற்றோர் பழைய மாணவர் பங்குபற்றல் போதாமை( இது ஓர் முக்கிய காரணி ).
எனவே, இலங்கை முஸ்லிம்களின் கல்வியை உயர்த்த வேண்டுமாயின் கல்வியை ஊக்குவிக்கும் சமூக நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
நிருவாக முகாமைத்துவ திறன்களை வளர்ப்பதற்கான நிறுவன ரீதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் மொழிக் கல்வி விரிந்த கண்ணோட்டத்தில் நோக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் அப்பால் முஸ்லிம் பெற்றோர்களின் மனப்பாங்கில் மாற்றம் ஏற்பட வேண்டும்.


(இலங்கையில் முஸ்லிம் கல்வி)

பாடசாலைக் கல்வியில் முஸ்லிம்கள்

(இலங்கையில் முஸ்லிம் கல்வி) 
ஒரு பாடசாலையின் கல்வி மேம்பாடு நான்கு அடிப்படைக் காரணிகளின் சுமூகமான பங்குபற்றுதலிலேயே தங்கியுள்ளன. ஆசிரியரின் பாத்திரம், பெற்றோரின் பங்கேற்பு, தலைமை ஆசிரியரின் முகாமைத்திறன், வெளியிலுள்ள நிருவாகத்தின் மேற்பார்வையும் வள ஒதுக்கீடும் இதில் பிரதானமானவை.

Saturday, April 28, 2012

GRADE 11 - SCIENCE - BIOLOGY

BIOLOGY - Tamil

GRADE 11 - SCIENCE - CHEMISTRY

 CHEMISTRY- Tamil

GRADE 11 - SCIENCE - PHYSICS

PHYSICS - Tamil
4.101 Xspj;J tpisahLjyghLfSk;.