அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே


பரீட்சைக்கு படிப்பதும் தயாராகுவதும்!

கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்

சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !

சிக்கல்கள் இல்லாமல் சிகரத்தை அடைந்தவர்கள் யாருமில்லை. சரித்திரம் படைத்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல சோதனைக் கதைகள் இருக்கின்றன.

அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் – கலாநிதி சுக்ரி

அரபுத் தமிழின் தோற்றத்திற்குஅடிப்படையாக அமைந்த வரலாற்றுக் காரணிகளை நாம் விளங்குதல் அவசியமாகும்.

ஒரு குழந்தை உருவாவது முதல் பிரசவிக்கப்படும் வரை..

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம்

3D MEDICAL ANIMATION

Vaginal Childbirth (Birth) animation video

QUESTION BANK க்கான பட முடிவு

GCE/AL EXAMINATION

QUESTION BANK


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Monday, December 31, 2012

தொடர்-1

அரபியர்கள் வாழ்ந்த இடங்களும் ...
  அரபிய சமுதாயங்களும்...

'நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு' என்பது மனித சமுதாயத்திற்காக அவர்கள் கொண்டு வந்த இறைத்தூதைக் குறிக்கும் சொல்லாகும். தான் கொண்டு வந்த இறைத்தூதை தங்களின் சொல், செயல், வழிகாட்டல், ஒழுக்க மாண்புகள் ஆகியவற்றின் மூலம் மனித குலத்திற்கு எடுத்துரைத்தார்கள். அந்த இறைத்தூதுத்துவத்தால் மனித வாழ்வின் அளவுகோல்களை முற்றிலுமாக மாற்றினார்கள்; தீமைகளைக் களைந்து நன்மைகளை போதித்தார்கள்; இருளைவிட்டு மக்களை அகற்றி ஒளியை நோக்கி அழைத்து வந்தார்கள். படைப்பினங்களை வணங்குவதிலிருந்து மனிதனை முழுமையாக விடுவித்து, படைப்பாளனாகிய ஒரே இறைவனை வணங்கும்படி செய்தார்கள். சுருங்கக்கூறின், இவ்வுலகில் நெறி தவறி வாழ்ந்த மனிதனின் வாழ்க்கைப் பாதையை மாற்றி செம்மையான அழகிய பாதையில் அவனை வாழச்செய்தார்கள்.
நமது இக்கருத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் முஹம்மது (ஸல்) அவர்கள் தூதராக அனுப்பப்படுவதற்கு முன் இருந்த நிலைமைகளையும், அவர்கள் தூதராக அனுப்பப்பட்ட பின் ஏற்பட்ட மாற்றங்களையும் முன் நிறுத்தி பார்ப்பது அவசியம்.
இதனால் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமின் பக்கம் மக்களை அழைப்பதற்கு முன்பிருந்த அரபிய சமுதாயங்கள், அவர்களது கலாச்சாரங்கள்; மேலும், அக்காலத்தில் இருந்த சிற்றரசர்கள், பேரரசர்கள், சமுதாய அமைப்புகள், அவர்களது மத நம்பிக்கைகள், சமூக பழக்க வழக்கங்கள், சடங்குகள் மற்றும் அவர்களது அரசியல், பொருளியல் ஆகியவற்றை குறித்து சில பிரிவுகளில் சுருக்கமாக ஆய்வு செய்வதும் அவசியம்.
இவற்றுள் ஒவ்வொன்றையும் பற்றி கூறுவதற்கு நாம் தனித்தனி பிரிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றோம். இப்போது அந்த பிரிவுகளைப் பார்ப்போம்.
அரபியர்கள் வாழ்ந்த இடங்கள்
'அரப்' என்ற சொல்லுக்கு பாலைவனம், பொட்டல் பூமி, (மரம், செடி கொடிகள், தண்ணீர் இல்லாத) வறட்சியான நிலப்பரப்பு எனப் பல அர்த்தங்கள் உள்ளன. நீண்ட காலமாக அரபிய தீபகற்பத்துக்கும் (இன்றைய ஸ¥தி) அங்கு வசிப்பவர்களுக்கும் இப்பெயர் கூறப்படுகிறது.
அரபிய தீபகற்பத்தின் மேற்கே செங்கடலும் ஸனாஃ நாடும், கிழக்கே அரபிய வளைகுடாவும் இராக்கின் சில பகுதிகளும், தெற்கே அரபிக் கடலும் (இது இந்தியப் பெருங்கடல் வரை தொடர்கிறது). வடக்கே ஷாம் (சிரியா) மற்றும் இராக்கின் சில நகரங்களும் இருக்கின்றன. இதன் பரப்பளவு 10,00,000 சதுர கிலோ மீட்டரிலிருந்து 13,00,000 சதுர கிலோ மீட்டர் வரையிலாகும்.
அரபிய தீபகற்பத்துக்கு புவியியல் ரீதியாகவும் அதன் இயற்கை அமைப்பாலும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அதன் உட்புற எல்லைகள் நாலா திசைகளிலும் மணற்பாங்கான பாலைவனத்தால் சூழப்பட்டுள்ளன.
அரபியர் அல்லாத வெளிநாட்டவர்கள் தங்களது ஆதிக்கத்தை அந்நாட்டில் செலுத்துவதற்கு இப்புவியியல் அமைப்பு பெரும் தடையாக இருந்தது. அதன் காரணமாக அந்நாட்டு மக்கள் எல்லாக் காலங்களிலும் தங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் சுதந்திரமானவர்களாகவே திகழ்ந்தார்கள். அவர்களுக்கு அருகாமையில் மாபெரும் இரு வல்லரசுகள் (ரோம்-பாரசீகம்) இருந்தும் அவை இப்பகுதியில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்த முடியாமல் போனதற்கு இந்த இயற்கையான புவியியல் அமைப்பே காரணம்!
அரபிய தீபகற்பத்தின் எல்லைகள் பெயர் பெற்ற பல கண்டங்களுக்கு நடுவில் அமைந்திருக்கின்றன. அவை கடற்பரப்புகள், சமவெளிகள் மூலம் அந்த கண்டங்களுடன் இணைந்திருக்கின்றன. அதன் வடமேற்குப் பகுதி ஆப்பிரிக்கா கண்டத்துடனும், வடகிழக்குப் பகுதி ஐரோப்பா கண்டத்துடனும், கிழக்குப் பகுதி மத்திய ஆசிரியா, தெற்கு ஆசியா மற்றும் தூர கிழக்கு நாடுகளுடனும் இணைந்துள்ளது. அவ்வாறே, ஒவ்வொரு கண்டமும் கடல் மார்க்கமாக அரபிய தீபகற்பத்துடன் இணைகிறது. அக்கண்டங்களிலிருந்து வரும் கப்பல்கள் அரபிய தீபகற்பத்தின் துறைமுகங்களில் தங்கிச் செல்கின்றன.
இப்புவியியல் அமைப்பின் காரணமாக, தெற்கு-வடக்கு பகுதிகள் மக்கள் வந்து ஒதுங்கும் இடமாகவும், வியாபாரம், பண்பாடு, சமயம் மற்றும் கலைகளின் பரிமாற்ற மையமாகவும் திகழ்ந்தன.
அரபிய சமுதாயங்கள்
வரலாற்றாசிரியர்கள் அரபிய சமுதாயத்தை வமிசாவளி அடிப்படையில் மூன்றாக பிரிக்கின்றனர்.
1) அல் அரபுல் பாயிதா
இவர்கள் பண்டைக் கால அரபியர்களான ஆது, ஸமூது, தஸ்மு, ஜதீஸ், இம்லாக், உமைம், ஜுர்ஹும், ஹழூர், வபார், அபீல், ஜாஸிம், ஹழ்ர மவ்த் ஆகிய வமிசத்தினர் ஆவர். முதல் வகையைச் சேர்ந்த இவர்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டதால் இவர்களுடைய வரலாற்று குறிப்புகள் ஏதும் தெரியவில்லை.
2) அல் அரபுல் ஆபா
இவர்கள் எஷ்ஜுப் இப்னு யஃருப் இப்னு கஹ்தானின் சந்ததியினர் ஆவர். கஹ்தான் வமிச அரபியர் என்றும் இவர்களை அழைக்கப்படும்.
3) அல் அரபுல் முஸ்தஃபா
இவர்கள் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினராவர். இவர்களை அத்னான் வமிச அரபிகள் என்றும் அழைக்கப்படும்.
மேற்கூறப்பட்ட அல் அரபுல் ஆபா என்பவர்கள் கஹ்தான் வமிசத்தில் வந்த யமன் வாசிகள். இவர்களது கோத்திரங்கள் ஸபா இப்னு யஷ்ஜுப் இப்னு யஃருப் இப்னு கஹ்தான் என்பவன் வழி வந்தவையாகும். இந்த கோத்திரங்களில் 1) ஹிம்யர் இப்னு ஸபா, 2) கஹ்லான் இப்னு ஸபா என்ற இரண்டு கோத்திரத்தினர் மட்டும் பிரபலமானவர்கள். ஹிம்யர், கஹ்லான் இருவரைத் தவிர ஸபாவுக்கு பதினொன்று அல்லது பதினான்கு பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்கும் அவர்களது வழி வந்தவர்களுக்கும் 'ஸபா வமிசத்தினர்' என்றே கூறப்பட்டது. அவர்களுக்கென தனிப் பெயர் கொண்ட கோத்திரங்கள் ஏதும் உருவாகவில்லை.
அ) ஹிம்யர் கோத்திரமும் அதன் உட்பிரிவுகளும்
1) குழாஆ: பஹ்ராஃ, பலிய்ம், அல்கைன், கல்ப், உத்ரா, வபரா ஆகிய குடும்பத்தினர் குழாஆவிலிருந்து உருவானவர்கள்.
2) ஸகாஸிக்: இவர்கள் ஜைது இப்னு வாம்லா இப்னு ஹிம்யர் என்பவன் சந்ததியினர் ஆவர். இதில் ஹிம்யரின் பேரரான ஜைது என்பவர் 'ஸகாஸிக்' என்ற புனைப் பெயரால் அழைக்கப்பட்டார். (பின்னால் கூறப்படவுள்ள கஹ்லான் வம்சத்தில் தோன்றிய கின்தா என்ற பிரிவில் கூறப்படும் ஸகாஸிக் என்பவர் வேறு. இங்கு கூறப்பட்டுள்ள ஜைது ஸகாஸிக் என்பவர் வேறு.)
3) ஜைது அல் ஜம்ஹூர்: இதில் ஹிம்யர் அஸ்ஙர் (சின்ன ஹிம்யர்), ஸபா அஸ்ஙர் (சின்ன ஸபா), ஹழுர், தூ அஸ்பா ஆகிய குடும்பங்கள் உருவாகின.
ரோமர்கள் அக்காலத்தில் மிஸ்ர், ஷாம் ஆகிய இரு நாடுகளையும் கைப்பற்றி கஹ்லான் வமிசத்தினரின் கடல் மற்றும் தரைவழி வியாபாரங்களைத் தடுத்தனர். இதனால் கஹ்லான் வமிசத்தினரின் வணிகங்கள் பெருமளவு நசிந்தன. இதனாலும் அவர்கள் யமனிலிருந்து குடிபெயர்ந்து போயிருக்கலாம். அத்தோடு ஸபா பகுதியில் 'அல்அரீம்' என்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனாலும் சில காலத்திற்குப்பிறகு அவர்கள் யமனிலிருந்து குடிபெயர்ந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு கஹ்லான் வமிசத்தினர் யமன் நாட்டை விட்டு வெளியேறியதற்கு சிலர் சில காரணங்களை கூறினாலும், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்பிருந்தே இவர்களின் வணிகங்கள் நசிந்து போயிருந்தன. தொடர்ந்து ஸபா நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாயங்களும், கால்நடைகளும் முழுமையாக அழிந்துவிட்டதால் ஸபா பகுதியில் இவர்களால் வாழ்க்கையைத் தொடர முடியவில்லை. இதனாலும் அவர்கள் அங்கிருந்து வெளியேறி இருக்கலாம் என சிலர் குறிப்பிடுகின்றனர்.
மேன்மைமிகு குர்ஆனில் 'ஸபா' எனும் அத்தியாயத்தில் இடம்பெற்றிருக்கும் 15-19 ஆகிய வசனங்கள் இவர்களின் கூற்றை உறுதி செய்கிறது.
மேற்கூறப்பட்ட இரு காரணங்களை தவிர மற்றொரு காரணமும் இருந்ததாக தெரிய வருகிறது. அதாவது கஹ்லான், ஹிம்யர் இரு வமிசத்தினர் இடையில் சண்டை சச்சரவுகள் தோன்றின. இதனால் கஹ்லான் வமிசத்தினர் தங்களது நாட்டைத் துறந்து அமைதியான இடத்தை நோக்கி சென்று விட்டனர். வணிகங்கள் நசிந்து விட்டது மட்டும் காரணமாக இருந்திருந்தால் ஹிம்யர் வமிசத்தினரும் ஸபாவில் இருந்து வெளியேறி இருப்பார்கள். ஆனால், அவர்கள் வெளியேறவில்லை. இதிலிருந்து இவ்விரு வம்சத்தினருக்கும் இடையே இருந்த பகைமையும் ஒரு காரணம் எனத் தெரிய வருகிறது.
நாடு துறந்த கஹ்லான் வமிசத்தினர் நான்கு வகைப்படுவர்:
1) அஜ்து கிளையினர்
இவர்கள் தங்களின் தலைவர் 'இம்ரான் இப்னு அம்ர் முஜைக்கியாஃ' என்பவன் ஆலோசனைக்கிணங்க நாடு துறந்தனர். இவர்கள் யமன் நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று சுற்றிப் பார்த்து, தங்களுக்கு விருப்பமான பகுதிகளில் தங்கினர். இவ்வமிசத்தில் யார் எங்கு தங்கினர் என்ற விபரங்கள் பின்வருமாறு:
இம்ரான் இப்னு அம்ர் என்பவர் தனது குடும்பத்துடன் 'உமான்' (ஓமன்) நாட்டில் சென்று தங்கினார். இவர்களை உமான் நாட்டு அஜ்து வமிசத்தினர் என்று சொல்லப்படுகின்றது.
நஸ்ர் இப்னு அஜ்து குடும்பத்தினர் 'துஹாமா' என்ற இடத்திற்குச் சென்று தங்கினர். இவர்களை ஷனூஆ அஜ்து வமிசத்தினர் எனக் கூறப்படும்.
ஸஃலபா இப்னு அம்ர் முஜைகியாஃ என்பவர் ஹி ஜாஸ் பகுதிக்குச் சென்று 'ஸஃலபியா' மற்றும் 'தூ கார்' என்ற இடங்களுக்கிடையில் தனது குடும்பத்துடன் தங்கினார். அவரது பிள்ளைகள் பேரன்கள் பெரியவர்களாகி நன்கு வலிமை பெற்றவுடன் அங்கிருந்து புறப்பட்டு மதீனா நகர் வந்து தங்கினார். இந்த ஸஃலபாவுடைய மகன் ஹாஸாவின் பிள்ளைகள்தான் அவ்ஸ், கஸ்ரஜ் என்ற இருவரும். இவ்விருவல் இருந்தே அவ்ஸ், கஸ்ரஜ் என்ற இரு வமிசங்கள் தோன்றின.
அஜ்து வமிசத்தை சேர்ந்த ஹாஸா இப்னு அம்ர் குடும்பத்தினர் ஹி ஜாஸ் பகுதியில் 'மர்ருல் ளஹ்ரான்' என்னும் இடத்தில் தங்கினர். சிறிது காலத்திற்குப் பின் மக்கா மீது படையெடுத்து அங்கு வசித்த ஜுர்ஹும் வமிசத்தவர்களை வெளியேற்றி விட்டு மக்காவை தங்களது ஊராக ஆக்கிக் கொண்டனர். இந்த ஹாஸாவின் வமிசத்திற்கு 'குஜாஆ' என்ற பெயரும் உண்டு.
ஜஃப்னா இப்னு அம்ர் என்பவர் தனது குடும்பத்துடன் சிரியா சென்று தங்கினார். இவரது சந்ததியினர்தான் வருங்காலத்தில் சிரியாவை ஆட்சி செய்த கஸ்ஸானிய மன்னர்கள் ஆவர். சிரியா வருவதற்கு முன் ஜஃப்னா இப்னு அம்ர் ஹி ஜாஸ் பகுதியில் உள்ள 'கஸ்ஸான்' என்ற கிணற்றுக்கருகில் குடியேறி சில காலம் தங்கியிருந்தனர். இதன் காரணமாகவே பிற்காலத்தில் இவர்களுக்கு 'கஸ்ஸானியர்' என்ற பெயரும் வந்தது.
கஅப் இப்னு அம்ர், ஹாஸ் இப்னு அம்ர், அவ்ஃப் இப்னு அம்ர் போன்ற சிறிய சிறிய குடும்பத்தவர்களும் மேற்கூறப்பட்ட பெரியகோத்திரங்களுடன் இணைந்து ஹி ஜாஸ் மற்றும் சிரியாவில் குடிபெயர்ந்தனர்.
2) லக்ம் மற்றும் ஜுதாம்
இவர்கள் கிழக்கு மற்றும் வடக்கு நாடுகளில் குடிபெயர்ந்தனர். லக்ம் வமிசத்தில் வந்த நஸ்ர் இப்னு ரபீஆ என்பவன் சந்ததியினர்தான் 'ஹீரா' நாட்டை ஆண்ட அரசர்கள். அந்த அரசர்களை 'முனாதிரா' என்று அழைக்கப்பட்டது.
3) பனூ தைய்
அஜ்து வமிசத்தினர் யமனிலிருந்து குடிபெயர்ந்தவுடன் இந்த கோத்திரத்தினரும் அரபிய தீபகற்பத்தின் வடக்கு பகுதிக்குச் சென்று அஜஃ, சல்மா என்ற இரு மலைகளுக்கிடையில் குடியேறினர். பிற்காலத்தில் அந்த மலைகளுக்கு 'தைய் மலைகள்' என்ற பெயர் வந்தது.
4) கின்தா
இந்த கோத்திரத்தினர் பஹ்ரைனில் குடியேறினர். அங்கு அவர்களுக்குப் பல சிரமங்கள் ஏற்படவே மீண்டும் யமன் நாட்டில் 'ஹழ்ர மவ்த்' எனும் நகரில் குடியேறினர். அங்கும் அவர்களுக்கு சிரமங்கள் ஏற்படவே, அரபிய தீபகற்பத்தின் நஜ்து பகுதியில் குடியேறி ஒரு பெரும் அரசாங்கத்தை நிறுவினர். ஆனால், சில காலங்களுக்குள்ளாகவே அவர்களது அரசாங்கம் அழிந்து சுவடுகள் தெரியாமல் போயிற்று.
ஹிம்யர் வமிசத்தைச் சேர்ந்த 'குழாஆ' என்ற கோத்திரத்தார் யமனிலிருந்து வெளியேறி 'மஷாஃபுல் இராக்' என்ற பகுதியில் 'பாதியத்துஸ் ஸமாவா' என்னும் ஊரில் குடியேறினர். குழாஆ வமிசத்தைச் சேர்ந்த சில பிரிவினர் 'மஷாஃபுஷ் ஷாம்' என்ற பகுதியிலும் ஹி ஜாஸ் மாநிலத்தின் வடக்குப் பகுதியிலும் குடியேறினர்.
இதற்கு முன் கூறப்பட்ட அல் அரபுல் முஸ்தஃபாவின் முதன் முதலான பாட்டனார் நபி இப்றாஹீம் (அலை) ஆவார்கள். நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் இராக் நாட்டில் ஃபுராத் நதியின் மேற்கு கரையில் கூஃபாவிற்கு அருகாமையில் உள்ள 'உர்' என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பம், உர் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களின் சமய சமூக பண்பாடுகள் குறித்து பல விரிவான தகவல்கள் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சிகள் மூலம் கிடைத்துள்ளன.
இப்றாஹீம் (அலை) அவர்கள் தனது ஊரிலிருந்து வெளியேறி ஹாரான் அல்லது ஹர்ரான் எனும் ஊரில் குடியேறினார்கள். சில காலத்திற்குப் பின் அங்கிருந்தும் புறப்பட்டு ஃபலஸ்தீனம் நாட்டில் குடியேறினார்கள். ஃபலஸ்தீனை தனது அழைப்புப் பணிக்கு மையமாக ஆக்கிக்கொண்டு அங்கும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் வாழ்ந்த மக்களை ஒரே இறைவனின் பக்கம் அழைத்தார்கள். ஒரு முறை மனைவி சாராவுடன் அழைப்புப் பணிக்காக அருகிலுள்ள ஓர் ஊருக்குச் சென்றார்கள். அன்னை சாரா மிக அழகிய தோற்றமுடையவராக இருந்ததை அறிந்த அவ்¥ரின் அநியாயக்கார அரசன், அவர்களை அழைத்து வரச்செய்து அவர்களுடன் தவறான முறையில் நடக்க முயன்றான். அன்னை சாரா அவனிடமிருந்து தன்னை பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டினார். அவன் சாராவை நெருங்க முடியாதபடி அல்லாஹ் அவனை ஆக்கிவிட்டான். அல்லாஹ்விடம் சாரா மிக மதிப்பிற்குரியவர்; மேலும், நல்லொழுக்கச் சீலர் என்பதை இதன் மூலம் அறிந்த அந்த அநியாயக்காரன், சாராவின் சிறப்பை மெச்சி அல்லது அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள சாராவுக்கு பணி செய்ய ஓர் அழகிய அடிமைப் பெண்ணை வழங்கினான். சாரா அவர்கள் அப்பெண்ணை தனது கணவர் இப்றாஹீமுக்கு வழங்கி விட்டார்கள். அப்பெண்மணிதான் அன்னை ஹாஜர் ஆவார். (ஸஹீஹுல் புகாரி)
இந்நிகழ்ச்சிக்குப் பின் இப்றாஹீம் (அலை) தங்களின் வசிப்பிடமான ஃபலஸ்தீனத்திற்குத் திரும்பினார்கள். அங்கு ஹாஜரின் மூலமாக 'இஸ்மாயீல்' என்ற மேன்மைக்குரிய ஒரு மகனை, அல்லாஹ் இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு வழங்கினான். பிறகு அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க இப்றாஹீம் (அலை) தங்களது மகன் இஸ்மாயீல் (அலை) மற்றும் ஹாஜரை அழைத்துக் கொண்டு மக்கா வந்தார்கள்.
அக்காலத்தில் அங்கு இறை இல்லமான 'கஅபா' கட்டடமாக இருக்கவில்லை. கஅபா இருந்த இடம் சற்று உயரமான குன்றைப்போல் இருந்தது. வெள்ளம் வரும்போது கஅபா இருந்த அந்த மேட்டுப் பகுதியின் வலது இடது இரு ஓரங்களைத் தண்ணீர் அரித்து வந்தது. கஅபத்துல்லாஹ்வின் அருகிலிருந்த ஓர் அடர்த்தியான மர நிழலில் அவ்விருவரையும் அமர வைத்து, சிறிது பேரீத்தங்கனிகள் இருந்த ஒரு பையையும், தண்ணீர் உள்ள ஒரு துருத்தியையும் அவ்விருவருக்காக வழங்கிவிட்டு, இப்றாஹீம் (அலை) ஃபலஸ்தீனம் திரும்பினார்கள். சில நாட்களில் அவ்விருவரின் உணவான பேரீத்தங்கனிகளும் தண்ணீரும் தீர்ந்துவிட்டன. அல்லாஹ் தனது அருளினால் பசியையும் தாகத்தையும் போக்கும் அற்புதமான 'ஜம்ஜம்' ஊற்றை அவ்விருவருக்காக தோன்றச் செய்தான். (ஸஹீஹுல் புகாரி)
இக்காலத்தில் இரண்டாவது ஜுர்ஹும் என்ற யமன் கோத்திரத்தினர் மக்கா வழியே வரும்போது (தண்ணீர் இருப்பதைப் பார்த்து) அங்கு வசிக்க விரும்பி அன்னை ஹாஜரிடம் அனுமதி பெற்று தங்கினர். சில வரலாற்று ஆசிரியர்கள் ''இந்த இரண்டாவது ஜுர்ஹும் வமிசத்தினர் முன்பிருந்தே மக்காவைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்குகளில் வசித்து வந்தனர் என்றும் மக்காவில் அன்னை ஹாஜர் குடியேறி, ஜம்ஜம் கிணறு தோன்றியவுடன் தாங்கள் வசித்து வந்த பள்ளத்தாக்குகளை விட்டு வெளியேறி மக்காவில் குடியேறினர்'' என்றும் கூறுகிறார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இமாம் புகாரி (ரஹ்) தங்களது நூலில் இச்சம்பவம் பற்றி குறிப்பிட்டிருப்பதை ஆராய்ந்தால் நாம் முதலில் கூறிய கூற்றே மிகச் சரியானது என்பதை அறிந்து கொள்ளலாம். இமாம் புகாரி (ரஹ்) கூறியிருப்பதாவது:
இப்றாஹீம் (அலை) தமது மனைவியையும் பிள்ளையையும் மக்காவில் தங்க வைப்பதற்கு முன்பே மக்கா வழியாக இரண்டாவது ஜுர்ஹும் கோத்திரத்தார் போக வர இருந்தார்கள். அன்னை ஹாஜர் மக்காவில் வந்து தங்கி தண்ணீர் வசதியும் ஏற்பட்டபின், அதாவது இஸ்மாயீல் (அலை) வாலிபமடைவதற்கு முன்பு இவர்கள் குடியேறியுள்ளார்கள். இவ்வாறே ஸஹீஹுல் புகாரியில் வந்துள்ளது. இதிலிருந்து இவர்கள் மக்காவின் எப்பகுதியிலும் இதற்கு முன் குடியிருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. அதே நேரம், தான் விட்டு வந்த மனைவி மற்றும் மகனை சந்திக்க நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் சென்று வந்தார்கள். மொத்தம் எத்தனை முறை சந்திக்கச் சென்றார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் நான்கு முறை சென்றதற்கான உறுதிமிக்கச் சான்றுகள் உள்ளன.
அந்த நான்கு முறைகள் வருமாறு:
1) இதைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கூறியிருக்கின்றான். நபி இப்றாஹீம் (அலை), அவர்கள் தமது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்து அல்லாஹ்வுக்கு தியாகம் செய்வதுபோல் கனவு ஒன்று கண்டார்கள். அக்கனவை அல்லாஹ்வின் கட்டளை என்று உணர்ந்து அதை நிறைவேற்ற மக்கா வந்தார்கள். இது குறித்து பின்வரும் குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) முகங்குப்புறக் கிடத்தியபோது நாம் ''இப்றாஹீமே!'' என நாம் அழைத்து ''உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்துவிட்டீர்கள் என்றும், நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்'' என்றும் கூறி, ''நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்'' (என்றும் கூறினோம்). ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம். (அல்குர்ஆன் 37 : 103-107)
இஸ்ஹாக்கைவிட இஸ்மாயீல் (அலை) பதிமூன்று ஆண்டுகள் மூத்தவர் என்று தவ்றாத்' வேதத்தில் 'தக்வீன்' என்ற அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவத்தைப் பற்றி விவரிக்கும் குர்ஆன் வசனங்களிலிருந்து இந்நிகழ்ச்சி இஸ்ஹாக் (அலை) பிறப்பதற்கு முன் நடந்திருக்க வேண்டும் என்றே தெரிகிறது. ஏனெனில், மேன்மைமிகு குர்ஆனில் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்துப் பலியிட முயன்ற நிகழ்ச்சி முழுதும் கூறப்பட்ட பிறகு அதையடுத்தே இஸ்ஹாக் (அலை) பிறப்பார் என்ற நற்செய்தி கூறப்பட்டுள்ளது.
ஆக, இதிலிருந்து இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுப்பதற்காக நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் ஒருமுறை மக்கா சென்றுள்ளார்கள் என்பதும், அப்போது இஸ்மாயீல் (அலை) வாலிபமடையவில்லை என்பதும் தெரிய வருகிறது.
மற்ற மூன்று பயணங்களைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் வாயிலாக இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதின் சுருக்கமாவது:
2) இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஜுர்ஹும் கோத்திரத்தாரிடம் அரபி மொழியைக் கற்றார்கள். அவர்களின் ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளை ஜுர்ஹும் கோத்திரத்தார் பெரிதும் விரும்பி தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இஸ்மாயீலுக்கு மணமுடித்து வைத்தார்கள். இத்திருமணத்திற்கு பிறகே அன்னை ஹாஜர் அவர்கள் இறந்தார்கள்.
இப்றாஹீம் (அலை) அவர்கள் மீண்டும் மனைவியையும் மகனையும் சந்திப்பதற்கு மக்கா வந்தபோது மனைவி இறந்த செய்தியைத் தெரிந்து கொண்டார்கள். இஸ்மாயீல் (அலை) அப்போது மக்காவில் இல்லை. இஸ்மாயீல் (அலை) அவர்களின் மனைவியிடம் தனது மகனைப் பற்றியும் அவ்விருவரின் வாழ்க்கை, சுகநலன்கள் பற்றியும் விசாரித்தார்கள். அப்பெண்ணோ தங்களது இல்லற நெருக்கடியையும் வறுமையையும் பற்றி முறையிட்டார். அதைக் கேட்ட நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் ''இஸ்மாயீல் வந்தால், தனது வீட்டு வாசல் நிலையை மாற்ற வேண்டும் என்று நான் கூறியதாக, அவரிடம் நீ சொல்!'' என்று சொல்லிவிட்டு சென்றார்கள். இஸ்மாயீல் (அலை) வீடு திரும்பியவுடன் அப்பெண் நடந்த நிகழ்ச்சியை விவத்தார். தனது தந்தை கூறிய கருத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அப்பெண்ணை இஸ்மாயீல் (அலை) மணவிலக்கு செய்துவிட்டார். அதற்குப் பிறகு ஜுர்ஹும் கோத்திரத்தாரின் தலைவர் 'முழாத் இப்னு அம்ர்' என்பவன் மகளைத் திருமணம் செய்தார்.
3) இஸ்மாயீல் (அலை) அவர்கள் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டபின் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் மக்கா வந்தார்கள். அப்போதும் இஸ்மாயீல் (அலை) வீட்டில் இல்லை. நபி இப்றாஹீம் (அலை) தனது மருமகளிடம் மகனைப் பற்றியும் குடும்ப நிலையைப் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு ''அல்லாஹ்வின் அருளால் நாங்கள் நலமுடன் இருக்கிறோம்'' என்று அவர் பதிலளித்தார். அதைக் கேட்ட நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் ''இஸ்மாயீல் (அலை) வந்தால் தனது வீட்டு வாசலின் நிலையை தக்க வைத்துக் கொள்ளட்டும் என்று நான் கூறியதாக, இஸ்மாயீலிடம் சொல்!'' என்று சொல்லிவிட்டு ஃபலஸ்தீனம் சென்றார்கள்.
4) நான்காம் முறை நபி இப்றாஹீம் (அலை) மக்கா வந்தபோது தனது மகனை சந்தித்தார்கள். இஸ்மாயீல் (அலை) ஜம்ஜம் கிணற்றருகில் இருந்த ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து தனது அம்பைக் கூர்மைபடுத்திக் கொண்டிருந்தார்கள். தந்தையைப் பார்த்ததும் எழுந்து மரியாதை செய்து தங்களது அன்பைப் பரிமாறிக் கொண்டார்கள். இப்பயணத்தில்தான் இருவரும் இணைந்து கஅபத்துல்லாஹ்வைக் கட்டி, அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மக்களை ஹஜ்ஜுக்கு அழைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இரண்டாவது மனைவியின் மூலம் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுக்குப் பன்னிரண்டு ஆண் பிள்ளைகளை அல்லாஹ் வழங்கினான். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
1) நாபித் (நபாåத்), 2) கைதார், 3) அத்பாஈல் 4) மிபுஷாம், 4) மிஷ்மாஃ, 6) தூமா, 7) மீஷா, 8) ஹுதத் 9) தீமா, 10) யதூர், 11) நஃபீஸ், 12) கைதுமான்.
பிற்காலத்தில் இந்த பன்னிரண்டு பிள்ளைகள் வழியாகத்தான் பன்னிரண்டு கோத்திரங்கள் உருவாகின. இவர்கள் அனைவரும் பல காலங்கள் மக்காவில் வசித்தனர். யமன், சிரியா, மிஸ்ர் ஆகிய நாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தினர். சில காலங்கள் கழித்து இவர்களில் பலர் அரபிய தீபகற்பத்தின் மற்ற பகுதிகளிலும் அதன் வெளியிலும் குடியேறினர். நாளடைவில் நாபித், கைதார் குடும்பங்களைத் தவிர மற்றவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளே இல்லாமல் போய்விட்டது.
ஜாஸின் வடக்குப் பகுதியில் நாபித் என்பவன் பிள்ளைகள் நன்கு வளர்ச்சி பெற்று முன்னேறி 'பத்ரா' என்ற ஊரை தலைநகராகக் கொண்டு வலுமிக்க ஓர் அரசாங்கத்தை நிறுவினர். இந்நகரம் (உர்துன்) ஜோர்டானின் தெற்கே வரலாற்றுப் புகழ் வாய்ந்த பழங்கால நகரமாகும். இவர்களின் அரசாட்சிக்கு பணிந்தே அங்குள்ளோர் வாழ்ந்தனர். இவர்களை அப்போது வாழ்ந்த எவராலும் இவர்களை எதிர்க்கவோ, புறக்கணிக்கவோ முடியவில்லை. இறுதியாக ரோமர்கள் இவர்களின் அரசாங்கத்தை அழித்தனர். இந்த நாபித்தின் வமிசத்திற்கு 'நிபித்தி வமிசம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. சிரியாவில் ஆட்சி செய்த கஸ்ஸான் வமிசத்து அரசர்களும் மதினாவில் வசித்த அவ்ஸ், கஸ்ரஜ் வமிசத்தினரும் இந்த நாபித் இப்னு இஸ்மாயீலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என வமிச ஆய்வாளர்களின் ஒரு கூட்டத்தினர் கூறுகின்றனர். இந்த வமிசத்தைச் சேர்ந்த பலர் அந்த ஊர்களில் இன்றும் வசிக்கின்றனர். இமாம் புகாரி (ரஹ்) தங்களது நூலில் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுடன் யமன் நாட்டு தொடர்பு (உறவு) என்று ஒரு பாடத்தை குறிப்பிட்டுள்ளார். அப்பாடத்தில் தலைப்புக்கு பொருத்தமான சில நபிமொழிகளை எழுதி, தனது கருத்துக்கு வலிமை சேர்த்துள்ளார்.
ஹதீஸ் கலை (நபிமொழி) வல்லுனர் இப்னு ஹஜரும் தனது விரிவுரையில், கஹ்தான் வமிசத்தினர் நாபித் இப்னு இஸ்மாயீலின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்ற கருத்தையே ஏற்றமானது என குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் மகன் கைதான் குடும்பத்தினர் பல காலங்கள் மக்காவில் வாழ்ந்தனர். அவரது சந்ததியில் அத்னானும் அவர் மகன் மஅதும் பேரும் புகழும் பெற்றவர்கள். இவர்களிலிருந்து அத்னானிய அரபியர்கள் தோன்றினர். இவர்களையடுத்து பிற்காலத்தில் இவரது சந்ததியில் தோன்றியவர்கள், அத்னான் வரை தங்களது மூதாதைகளின் பெயர்களை சரியாக மனனமிட்டு பாதுகாத்துக் கொண்டனர். நபி (ஸல்) அவர்களின் வமிச தலைமுறையில் இந்த அத்னான் என்பவர் 21-வது தலைமுறை பாட்டனாராவார்.
சில அறிவிப்புகளில் வந்துள்ளதாவது: நபி (ஸல்) அவர்கள் தங்களின் வமிச தலைமுறைகளை குறிப்பிடும்போது அத்னான் பெயர் வந்தவுடன் நிறுத்திக் கொண்டு, ''இதற்கு மேல் வமிச தலைமுறையை கூறியவர்கள் பொய்யுரைத்து விட்டனர்'' என்று கூறுவார்கள்.
இவ்விடத்தில் மற்றொரு கருத்தும் குறிப்பிடத்தக்கது. அதாவது, சிலர் மேற்கூறப்பட்ட நபிமொழி பலவீனமானது என்பதால் அத்னானுக்கு மேலும் தலைமுறை பெயர்களை கூறலாம் என்கின்றனர். எனினும், அத்னானுக்கு மேல் இவ்வறிஞர்கள் கூறும் தலைமுறையில் பல மாறுபட்ட பெயர்களை கூறுகின்றனர். அக்கருத்துகளை ஒருங்கிணைக்க முடியாத அளவு அதில் வேறுபாடுகளும் உள்ளன.
''அத்னான் மற்றும் நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கிடையில் நாற்பது தலைமுறைகள் உள்ளன'' என்று பிரபலமான வரலாற்று அறிஞர் இப்னு ஸஅது (ரஹ்) கூறுகிறார். இக்கால அறிஞர்களில் பெரும் ஆய்வாளராக விளங்கும் முஹம்மது சுலைமான் என்பவரும் இக்கருத்தையே சரிகாண்கிறார். மேலும், இமாம் தபரி மற்றும் மஸ்¥தி தங்களின் பல கருத்துக்களில் இதனையும் ஒன்றாக கூறியுள்ளார்கள்.
மஅதின் மகன் நஜார் என்பவர் மூலம் பல குடும்பங்கள் தோன்றின. (மஅதுக்கு 'நஜார்' என்ற ஒரு மகன் மட்டும்தான் இருந்தார் என்று சிலர் கூறியுள்ளனர்.)
நஜாருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் மூலம் பெரியவமிசங்கள் தோன்றின. 1) இயாத், 2) அன்மார், 3) ரபீஆ, 4) முழர்.
இக்கோத்திரங்களைப் பற்றியுள்ள விவரங்களின் வரைபடத்தை அடுத்த பக்கத்தில் பார்க்கவும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் இப்றாஹீமுடைய பிள்ளைகளில் இஸ்மாயீலைத் தேர்வு செய்தான். இஸ்மாயீலுடைய பிள்ளைகளில் 'கினானா' குடும்பத்தைத் தேர்வு செய்தான். கினானா குடும்பத்தில் குறைஷியர்களைத் தேர்வு செய்தான். குறைஷியர்களில் ஹாஷிம் குடும்பத்தைத் தேர்வு செய்தான். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: படைப்பினங்களில் (மனிதன், ஜின் என்ற இரு பிரிவில்) மிகச் சிறந்த பிரிவில் என்னைப் படைத்து அதில் (முஸ்லிம், காஃபிர்களென்று) இரு பிரிவுகளில் சிறந்த பிரிவில் என்னை ஆக்கினான். பிறகு கோத்திரங்களைத் தேர்வுசெய்து அதில் சிறந்த கோத்திரத்தில் என்னைப் படைத்தான். பிறகு குடும்பங்களைத் தேர்வுசெய்து, அதில் மிகச் சிறந்த குடும்பத்தில் என்னை ஆக்கினான். நான் அவர்களில் ஆன்மாவாலும் மிகச் சிறந்தவன். குடும்பத்தாலும் மிகச் சிறந்தவன். (ஸஹீஹ் முஸ்லிம்)
மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது: அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து அவற்றில் மிகச் சிறந்த பிரிவினரில் என்னை ஆக்கி வைத்தான். பிறகு அப்பிரிவை இரண்டாக ஆக்கி அவற்றில் மிகச் சிறந்த பிரிவில் என்னை ஆக்கினான். பிறகு அவர்களை கோத்திரங்களாக ஆக்கி அவற்றில் மிகச் சிறந்த கோத்திரத்தில் என்னை ஆக்கினான். பிறகு அவர்களைப் பல குடும்பங்களாக ஆக்கி அவற்றில் குடும்பத்தாலும் ஆன்மாவாலும் சிறந்தவர்களில் என்னை ஆக்கினான். (ஜாமிவுத் திர்மிதி)
அத்னான் சந்ததியினருடைய எண்ணிக்கை பல்கிப் பெருகியபோது அவர்கள் மழை வளம், பசுமை, செழிப்புமிக்க இடங்களைத்தேடி அரபு நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்றனர். அப்து கைஸ், பக்ரு இப்னு வாயில் மற்றும் தமீம் ஆகிய சந்ததியினர் பஹ்ரைனிலும், ஹனீஃபா இப்னு அலீ இப்னு பக்ர் குடும்பத்தினர் 'யமாமா' சென்று அங்குள்ள 'ஹுஜ்ர்' பகுதியிலும் குடியேறினர். (ஹுஜ்ர் என்பது யமாமாவின் ஒரு நகரமாகும்.) பக்ர் இப்னு வாயிலின் ஏனைய குடும்பங்கள் யமாமா, பஹ்ரைன், ஸைஃப் காளிமா, அதன் அருகாமையிலுள்ள கடற்பகுதி, இராக்கின் கிராமப்புறங்கள் ஆகிய இடங்களில் குடியேறினர்.
தங்லிப் குடும்பத்தவர்கள் 'ஃபுராத்' நதிக்கரையில் குடியேறினர். அவர்களில் ஒரு பிரிவினர் பக்ர் குடும்பத்தாருக்கு அருகில் வசித்தனர். பனூ தமீம் குடும்பத்தவர்கள் பஸராவிலும் அதன் கிராமப் பகுதிகளிலும் வசித்தனர்.
சுலைம் குடும்பத்தினர் மதீனாவுக்கு அருகாமையில் வசித்தனர். அவர்கள் வாதில் குராவிலிருந்து கைபர்வரை, மதீனாவின் கிழக்குப் பகுதி, அதன் இரு மலைப்பகுதிகள் மற்றும் ஹர்ரா வரை வசித்தனர்.
அஸத் குடும்பத்தினர் 'தீமாஃ' நகரத்தின் கிழக்குப் பகுதிலும் 'கூஃபா' நகரத்தின் மேற்குப் பகுதியிலும் வசித்தனர். அவர்களுக்கும் தீமாஃவுக்குமிடையே 'தய்ம்' கோத்திரத்தைச் சேர்ந்த புஹ்த்துர் குடும்பத்தவர்களின் குடியிருப்புகள் அமைந்திருந்தன. அவ்¥ருக்கும் கூஃபாவுக்கு மிடையில் ஐந்து நாட்களுக்கு உரிய நடைதூரம் இருந்தது. திப்யான் குடும்பத்தவர்கள் தீமா முதல் ஹவ்ரான் நகரம் வரையிலும் கினானாவின் சந்ததியினர் 'திஹாமா' பகுதியிலும் வசித்தனர். மக்காவிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குறைஷி குடும்பத்தவர்கள் வசித்தனர். அவர்கள் ஒற்றுமை இன்றி பலவாறாகப் பிரிந்து வாழ்ந்தனர். குஸய்ம் இப்னு கிலாப் அவர்களை ஒருங்கிணைத்து குறைஷியருக்கென தனிப்பெரும் சிறப்புகளையும் உயர்வுகளையும் பெற்றுத் தந்தார்.

Sunday, December 30, 2012

மட்டு., அம்பாறை மாவட்டங்களில் தொழிற்பயிற்சி கற்கைகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்

(31ஆம் திகதி திங்கட்கிழமை விண்ணப்பங்களை அனுப்ப முடியும் .மேலதிக விபரங்களுக்கு 067-2250279 (அம்பாறை) 065 - 2240159 (மட்டக்களப்பு) என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் )அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2013ஆம் ஆண்டில் பயிற்சிநெறிகளை தொடர்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் 31ஆம் திகதி திங்கட்கிழமை விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 தொழிற்பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படும் 42 கற்கைநெறிகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள 15 தொழிற்பயிற்சி பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படும் 59 பயிற்சிநெறிகளுக்குமே இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை தொழிற்பயிற்சி வளாகத்தினால் வழங்கப்படும் தளபாட உற்பத்தி, மின்னியல் தொழில்நுட்பம், வாயுசீராக்கல் மற்றும் குளிரூட்டலில் தேசிய சான்றிதழ், மோட்டார் வாகன தொழில்நுட்பம், மோ.சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி திருத்துனர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளோமா, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், இலத்திரனியல் தொழில்நுட்பம், இயந்திரவியல் தொழில்நுட்பம், அழகுக் கலைஞர் மற்றும் சிகை அலங்காரத்தில் தேசிய சான்றிதழ் போன்ற பாடநெறிகளுக்கும் ஆரையம்பதி தொழிற்பயிற்சி நிலையம்; வழங்கும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், அழகுக் கலைஞர் மற்றும் சிகை அலங்காரம் போன்ற கற்கைகளுக்கும் வாழைச்சேனை தொ.ப.நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், நீர்க்குழாய் பொருத்துனர் ஆகிய பாடநெறிகளுக்கும் வெல்லாவெளி நிலையத்தின் மரக் கைவினைஞர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், நீர்க்குழாய் பொருத்துனர், தையல் பாடநெறிகளுக்கும் காத்தான்குடி பயிற்சி நிலையத்தினால் வழங்கப்படும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியலாளர், கணிய அளவையியலில் டிப்ளோமா பாடநெறிகளுக்கும் ஓட்டமாவடி பயிற்சி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் கற்கைக்கும்; ஏறாவூர் மற்றும் கல்லடி தொ.ப. நிலையங்களால் வழங்கப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ் பயிற்சி நெறிக்கும் விண்ணப்பிக்க முடியும்.

அத்துடன் பட்டிப்பளை தொழிற்பயிற்சி நிலையத்தின் மின்னியல் தொழில்நுட்பம், கட்டட கைவினைஞர், தொழில்சார் தையல் கற்கைகளுக்கும் வாகரையிலுள்ள பயிற்சி நிலையத்தின் மேசன், மரக் கைவினைஞர் பயிற்சிநெறிகளுக்கும் ஓந்தாச்சிமடம் தொ.ப. நிலையத்தின் மோ.சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி திருத்துனர், படகு இயந்திரத் தொழில்நுட்பம், அலுமீனியம் பொருத்துனர், விவசாய உபகரண தொழில்நுட்பம் போன்ற பயிற்சிகளுக்கும் களுவாஞ்சிக்குடி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், நீர்க்குழாய் பொருத்துனர், தையல், மின்னியல் தொழில்நுட்பம், இலத்திரனியல் தொழில்நுட்பம், உருக்கு ஒட்டுவேலை தொழில்நுட்பம் கற்கைகளுக்கும் வவுணதீவு தொ.ப.நிலையத்தினால் வழங்கப்படுகின்ற மரக் கைவினைஞர், மேசன், நீர்க்குழாய் பொருத்துனர் ஆகிய பயிற்சிநெறிகளுக்கும் செம்மண்ணோடை பயிற்சி நிலையத்தின் நீர்க்குழாய் பொருத்துனர் பயிற்சிக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் தமிழ்பேசும் பிரதேசங்களில் அமைந்துள்ள நிந்தவூர் (மாவட்ட) தொழிற்பயிற்சி வளாகத்தினால் வழங்கப்படும் தொழிற்சாலைக்கான மின்னிணைப்பாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளோமா, குளிரூட்டல் மற்றும் வாயு சீராக்கி திருத்துதல், வானொலி தொலைக்காட்சி மற்றும் அதனோடிணைந்த உபகரணங்கள் திருத்துதல், தையல் (பெண்கள்), சாரதிப்பயிற்சி போன்ற கற்கைகளுக்கும் சம்மாந்துறை தொ.ப.நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், தொழிற்சாலை மின்னிணைப்பாளர், வாகன திருத்துனர், குளிரூட்டல் மற்றும் வாயு சீராக்கி திருத்துதல், மோ.சைக்கிள் - முச்சக்கரவண்டி திருத்துனர், ஆடைதொழிற்சாலை தரக் கட்டுப்பாட்டாளர், அதிவேக தையல் இயந்திர இயக்குனர், பேக்கரி தொழில்நுட்பம், மோட்டர் வைண்டிங் போன்ற பயிற்சிகளுக்கும் மத்திய முகாம் நிலையத்தினால் வழங்கப்படுகின்ற நிர்மாண கைவினைஞர், நீர்க்குழாய் பொருத்துனர், வீட்டு மின்னிணைப்பாளர், தையல் (பெண்கள்), ஒட்டுவேலை செய்பவர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், மோ.சைக்கிள் - முச்சக்கரவண்டி திருத்துனர் பயிற்சிநெறிகளுக்கும் பொத்துவில் தொ.ப.நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், வீட்டு மின்னிணைப்பாளர், மர கைவினைஞர், அறை பராமரிப்பாளர், சமையற்காரர், உணவு பரிமாறுபவர் ஆகிய கற்கைகளுக்கும் காரைதீவு பயிற்சி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், நீர்க்குழாய் பொருத்துனர், மர கைவினைஞர், அலுமீனியம் பொருத்துனர், நிர்மாண கைவினைஞர் ஆகிய கற்கைகளுக்கும் அக்கரைப்பற்று நிலையத்திலுள்ள மோட்டர் வைண்டிங், வீட்டு மின்னிணைப்பாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் கற்கைநெறிகளுக்கும் சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், வீட்டு மின்னிணைப்பாளர் பயிற்சிகளுக்கும் இறக்காமம் மற்றும் ஆலையடிவேம்பு பயிற்சி நிலையங்களால் வழங்கப்படும் மர கைவினைஞர் கற்கைநெறிக்கும் இப்போது விண்ணப்பிக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு 067-2250279 (அம்பாறை) 065 - 2240159 (மட்டக்களப்பு) என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டு., அம்பாறை மாவட்டங்களில் தொழிற்பயிற்சி கற்கைகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்

(31ஆம் திகதி திங்கட்கிழமை விண்ணப்பங்களை அனுப்ப முடியும் .மேலதிக விபரங்களுக்கு 067-2250279 (அம்பாறை) 065 - 2240159 (மட்டக்களப்பு) என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் )

2013ஆம் ஆண்டு முதலாம் வருட பல்கலை மாணவர்களுக்காக கல்வி நடவடிக்கை மார்ச்சில்

2013ஆம் ஆண்டு பல்கலைக்கழக புதுமுக மாணவர்களிற்கான கல்வி நடவடிக்கைகள் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடங்களை விட எதிர்வரும் 2013ஆம் ஆண்டில் 5,609 மாணவர்கள் மேலதிகமாக பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

இதேவேளை கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான பல்கலைக்கலக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

(அத தெரண தமிழ்)

Saturday, December 29, 2012

FOR SMALL KIDS

Curtin பல்கலைக்கழகத்துடன் இணைந்து SLIITஇன் பொறியியல் பட்டப்படிப்பு

SLIIT கல்வி நிலையமானது அவுஸ்திரேலியாவின் பிரபல Curtin பல்கலைக்கழகத்துடன் இணைந்து மாணவர்களுக்கு கட்டட மற்றும் கட்டுமான பொறியியல், கணணி முறை பொறியியல், நுElectrical Power Engineering மற்றும் இயந்திர பொறியியல் போன்ற பிரிவுகளில் புதிய பொறியியல் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது SLIIT நிலையமானது Sheffield Hallam University (SHU) - UK பல்கலைக்கழகத்துடன் இணைந்து MSc. in Telecommunication and Electronic Engineering, BEng in Electronic Engineering, and MEng. in Electrical and Electronic Engineering போன்ற பிரிவுகளில் கற்கைநெறிகளை வழங்கி வருகிறது. ´சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் உள்நாட்டு துறைகளுடனான SLIIT நிலையத்தின் பங்காண்மை ஊடாக பொறியியல் பிரிவில் மாணவர்களுக்கு கல்விசார் வாய்ப்புகளை வழங்கும் குறிக்கோளுடன் செயற்படுகிறோம். இத்துறைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வகையிலான மாணவர்களை உருவாக்கிடும் குறிக்கோளுடன் இப் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன´ என SLIIT இன் பிரதான நிறைவேற்று அதிகாரியான பேராசிரியர்.லலித் கமகே தெரிவித்தார்.

´இந்நான்கு வருட பட்டப்படிப்பானது தற்போதைய துறைசார் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இக் கற்கைநெறியில் இளம் எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு தகுந்த தொழிற்தகைமைகள் உள்ளடங்கிய பாடத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது´ என SLIIT பொறியியல் பிரிவின் டீன் பேராசிரியர்.அஷோக் பீரிஸ் தெரிவித்தார். மேலும் ´;ஓராண்டுக் கற்கைநெறியில் உள்ளடக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்கள் அவுஸ்திரேலியாவின் பொறியியல் கல்வி நிலையத்தின் பாராட்டுகளை பெற்றுள்ளது. இப்பாடத்திட்டமானது அவுஸ்திரேலியாவின் பொறியியல் கல்வி நிலையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளதுடன், பட்டயக் பொறியாளார்களுக்கு (chartered engineer) அவசியமான கல்விசார் தகைமைகளையும் வழங்குகிறது. இப்பட்டதாரிகள் ஆலோசனை பொறியியல், பாரிய மற்றும் நடுத்தர ஒப்பந்தக்காரர், விசேட உப ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பினை தேட முடியும். மேலும் இப்; பொறியியல் பட்டதாரிகள் சர்வதேச ரீதியாக வேலைவாய்ப்பினையும் பெற்றுக்கொள்ள முடியும்´ என்றார்.

2013ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில்; SLIIT நிலையத்தில் புதிய பொறியியல் பிரிவு கட்டத் தொகுதியொன்றின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்புதிய கட்டிடமானது 7000m2 நிலப்பரப்பில் உருவாவதுடன், 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கட்டிட நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. கட்டிடத்தின் அடித்தளத்தில் கட்டடப் பொறியியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் ஆய்வுகூடம், இரண்டாம் மாடியில் இலத்திரனியல் மற்றும் Materials Engineering ஆய்வுகூடம் ஆகியன அமைக்கப்படவுள்ளன. இப்புதிய கட்டடத்தின் நான்கு மாடிகளிலும் சொற்பொழிவு அறை, பயிற்சி வகுப்பறைகள், Design ஸ்டூடியோ, நூலகசாலை போன்றவற்றிற்கு அவசியமான விசாலமான அறைகளும், மாணவர்களிற்கு ஆலோசனைகளை வழங்கும் பொருட்டு ஐந்தாவது மாடியில் பணியாளர் அறைகளும் அமைக்கப்படவுள்ளன. இப்பிரிவில் தற்போது 25 நிரந்தர பணியாளர்கள் உள்ளதுடன், அவர்களுள் ஆறு பேர் PhD பட்டம் பெற்றவர்களாவர். இதற்கு மேலதிகமாக அமெரிக்க பல்கலைக்கழகம் மற்றும் துறைசார் நிபுணர்களாக உள்ள சிரேஷ்ட பணியாளர்கள் வெளிக்கள முறை அடிப்படையில் வருகை தருகின்றனர்.

இலங்கையிலுள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையமாக SLIIT திகழ்கிறது. இக் கல்வி நிலையத்தின் ஊடாக 18,000 தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். SLIIT நிறுவனத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்;ட கல்விசார் தகைமை ஊடாக பட்டதாரிகள் பலர் இலங்கையின் வியாபாரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியல் துறைகளில் முன்னோடிகளாக உள்ளனர். மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள www.sliit.lk என்ற இணையத்தள முகவரியை நாடவும்

சோப்பு உருவான வரலாறு


குளிப்பவர்கள் அனைவரும் ஒருமுறை படித்துத்தான் பாருங்களேன்!
இன்றைய நவீன காலகட்டங்களில் சோப்பை பயன்படுத்தாமல் குளிப்பது நூறு சதவீத முழுமையான குளியலாக இருக்காது என்பதில் எவர்க்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளைக் குளிப்பாட்ட கூட இன்று நாம் சோப்பை பயன்படுத்துகிறோம். ஆனால் சென்ற தலைமுறை மக்களின் குளியலறையில் சோப்பு இந்த அளவிற்கு முக்கிய இடத்தை பெற்றிருந்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

உதாரணத்திற்கு நமது தாத்தாவை எடுத்துக்கொள்வோம். நம்மை போல சிறு வயதிலிருந்தே அவர் சோப்புகளை பயன்படுத்தியிருப்பார் என்று எவரும் கூறிவிடயியலாது. சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும், சோப்புகளை மனிதர்கள் எந்தனை ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள் என்று நினைகிறீர்கள் நண்பர்களே ஒரு நூறு இருநூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருவார்கள் என்று நீங்கள் நினைப்பீர்களா ம்ம்ஹூம் அதுதான் இல்லை சோப்புகளை சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தான் உண்மை. பண்டைய பாபிலோனியர்கள் என்னும் தற்போதைய ஈராக்கியர்கள் தான் உலகிலேயே முதன் முதலில் சோப்புகளை தயாரித்து பயன்படுத்தியவர்கள் ஆவர்.

மெசபடோமியப் பிரதேசத்தின் புகழ் பெற்ற பேரரசுகளில் ஒன்றான பாபிலோனிய பேரரசின் (தற்போதைய ஈராக்கின் அல்ஹில்லாஹ் மற்றும் பாபில் புரோவின்ஸ் (Al Hillah & Babil Province) கடைசி அரசரான நபோனிதஸ் (கி.மு.556 – கி.மு.539) ஆட்சிக்காலத்தில் அரண்மனையில் பணிப்பெண்களாக வேலை பார்த்து வந்த பெண்கள், எரிந்த மரங்களின் சாம்பலை பயன்படுத்தி சலவைக்கற்களின் (Marble) மீது படிந்திருந்த கறைகளை சுத்தம் செய்தனர். இதனை ஒரு நாள் தற்செயலாக பார்வையிட்ட நபோனிதஸ் இது குறித்து தன்னுடைய அரண்மனை ரசவாதிகளிடம் (வேதியியலாளர்கள்) விவாதம் செய்தார். இந்த நிகழ்வுதான் சோப்பு தயாரிப்பிற்கு வித்திட்டது என்று சொல்லலாம்.

இது குறித்து ஆராய்ந்த அன்றைய பாபிலோனிய வேதியியலாளர்கள், கறைகளை அகற்றி சுத்தம் செய்வதற்க்காக ஒரு பொருளை உருவாக்கிட வேண்டும் என்று ஆவல் கொண்டனர். அந்த பொருள் தண்ணீரில் கரையக் கூடியதாக இருக்க வேண்டும் அதே நேரம் இலகுவாக கரைந்துவிடாமலும் இருக்க வேண்டும், மிக முக்கியமாக அது கறைகளையும் அகற்றவேண்டும் என்பது அவர்களின் முன்னின்ற சவாலாக இருந்தது.

அதனை தொடர்ந்து, சாம்பலுடன், விலங்குகளின் கொழுப்புகளில் இருந்து பெறப்பட்ட கொழுப்பு எண்ணெய், மெழுகு, மற்றும் உப்பு இவற்றுடன் தண்ணீரையும் சேர்த்து ஒரு காரகரைசல் தயாரிக்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட இந்தக் காரகரைசலை(alkali) சூடுபடுத்தி கொதிக்க வைத்து வற்றச் செய்தனர். காரகரைசல் வற்றி தின்ம நிலையை அடைந்ததும் அவை சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டது. இதுதான் மனிதன் முதலில் தயாரித்த சவர்க்காரம் (soap) ஆகும். தயாரித்த சோப்புகள் முதலில் தரையை சுத்தம் செய்யவும் பின்பு ஆடைகளை சுத்தம் செய்யவும் இறுதியாக குளிக்கவும் பயன்படுத்தினார்கள். பின்னர் இத்தொழில்நுட்பம் சில வணிகர்களின் வாயிலாக சிரியா, ரோம், எகிப்த்து மற்றும் மொரோக்கோ வரை சென்றடைந்தது.சரி சோப்பு தயாரித்தாகிவிட்டது, இனி இந்த சோப்பிற்கு, சோப்பு என்று எப்படி பெயர் வந்ததது என்று பார்ப்போமா?

Soap என்ற சொல் Sapo என்ற லத்தின் சொல்லில் இருந்து பிறந்ததாகும்.கி.மு.ஏழாம் நூற்றாண்டில் ரோமாபுரி பேரரசின் தலைநகரான ரோமில் (தற்போது Rome, Italy) Sapo என்றொரு மலை இருந்ததாம். அந்த மலை எதிர்பாராத விதமாக ஒரு நாள் தீப்பற்றிகொள்ள அந்த மலையில் வசித்த விலங்குகள் உட்பட மரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. அக்காலகட்டங்களில் சோப்பு தயாரிக்க விலங்குகளின் உடலிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு ஒரு முக்கிய மூலப்பொருளாக இருந்த காரணத்தினால், முற்றிலும் எரியாமல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட விலங்குகளின் உடலிலிருந்து கொழுப்பை நீக்கிய பின்பே அவற்றின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறந்து போன அந்த விலங்குகளின் நினைவாக அந்த மலையின் பெயரை சோப்புக்கு Sapo என்று பெயரிட்டதாக சில வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கி.பி.78-ஆம் ஆண்டளவில் புகழ் பெற்று விளங்கிய ரோமானிய எழுத்தாளரான பிளினி தி எல்டர் (Pliny the Elder) 'இயற்கையின் வரலாறு' (Historia Naturalis) என்ற தனது நூலில் சோப்பை பற்றி குறிப்பிடுகையில் Sapo என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, தவறுதலாக Soap என்று குறிப்பிட்டுவிட்டார், உச்சரிப்பதற்கு sapo என்பதை விட Soap என்பது மிக எளிதாக இருந்ததால் அன்று முதல் இன்றுவரை அந்த பெயரே நிலைத்துவிட்டது.கிட்டத்தட்ட பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய யூனியனிலுள்ள பெரும்பாலான நாடுகள் சோப்புகளை இறக்குமதி செய்ததே தவிர தயாரிக்கும் முயற்ச்சியில் எந்த நாடுகளும் ஈடுபடவில்லை என்று தான் கூற வேண்டும், பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தான் ஐரோப்பிய யூனியனின் தேவைக்கென்று பிரான்ஸிலுள்ள டௌலோன் மற்றும் மார்ஸிய்லீ (Toulon, Marseille) ஆகிய நகங்களில் சோப்பு தயாரிக்கும் பணி துவங்கியது.

பதினாறாம் நூற்றாண்டு வரை மனிதர்கள், துணிகளை துவைப்பதற்க்கும் குளிப்பதற்கும் ஒரே சோப்புகளைத்தான் பயன்படுத்தினார்கள். பிரான்ஸில் சோப்பு தயாரிக்கப்பட்ட சில காலங்களிலேயே அதாவது பதினாறாம் நூற்றாண்டில் துவக்கத்திலேயே மனிதர்கள் குளிப்பதற்க்காக தனியாக மென்மையான சோப்புகள் தயாரிக்கும் பணி துவங்கியது. இதில் விலங்குகளின் கொழுப்புக்கு பதிலாக ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், மற்றும் சின்னம் எண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

கி.பி.1788-ஆம் ஆண்டு வரை சோப்பு தயாரித்தல் என்பது ஒரு கடுமையான தொழிநுட்பமாகவும், அது ஒரு குடிசை தொழிலாகவும் தான் இருந்துவந்தது.இந்நிலையில் 1789-ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ஆண்ட்ரூவ் பியர்ஸ் (Andrew Pears) என்பவர் முதன் முதலில் மிக எளிமையான தொழில்நுட்பத்தில் நறுமனத்துடன் கூடிய மென்சோப்புகளை தயாரிக்கும் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டறிந்தார். இந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி இவரது மருமகனான தாமஸ் ஜே. பார்ட் (Thomas J. Barratt) என்பவர் லண்டன் மாநகரில் உள்ள Isleworth என்ற இடத்தில் 1862-ஆம் அண்டு சோப்பு தயாரிக்கும் கம்பெனி ஒன்றை துவக்கினார். தயாரிக்கப்பட்ட சோப்பிற்க்கும் அந்த சோப்பு கம்பெனிக்கும் தனது மாமனாரின் நினைவாக பியர்ஸ் என்று பெயரிட்டார். இதுதான் உலகில் முதன் முதலில் வணிக நோக்கில் துவங்கப்பட்ட முதல் சோப்பு கம்பெனியாகும்.

தரமான சோப்பாக இருந்த காரணத்தினால் பியர்ஸ் சோப்பின் விலையும் சற்று அதிகமாகத்தான் இருந்தது இந்த காரணங்களால் சோப்புகளை அப்போது மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் தரமான சோப்புகளை குறைந்த விலையில் தயாரிக்கும் தொழில்நுட்பத்தினை வில்லியம் கோசேஸ் (William Gossage) என்பவர் கண்டறிந்து அறிமுகப்படுத்தினார். இதன்பிறகு தான் சோப்புகளை ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.உலகில் அனைத்தும் நாடுகளிலும் உள்ள மக்களை சோப்பு சென்றடைய காரணமாக இருந்தவர்கள் வில்லியம் லீவர் மற்றும் ஜேம்ஸ் லீவர் என்ற இரு சகோதரர்கள் என்று சொன்னால் மிகையில்லை.

ஒரு பொருளை தயாரிப்பது மட்டும் முக்கியமல்ல அதனை சந்தைப்படுத்தும் வித்தை அறிந்தவனால் மட்டுமே அப்பொருளை உலககெங்கும் வாழும் அனைத்து நாட்டுமக்களிடமும் கொண்டு போய் சேர்த்திட முடியும் என்ற உண்மையை இவர்கள் தான் உலகிற்கு தெரியச்செய்தவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் இணைந்து 1886-ல் லீவர் பிரதர்ஸ் (Lever Brothers) என்ற பெயரில், பொருட்களை சந்தைப்படுத்தும் கம்பெனி ஒன்றை துவங்கினார்கள். இவர்களில் திறமையால் தான் சோப்பு உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் மிகக்குறுகிய காலத்தில் பட்டி தொட்டி எங்கும் சந்தைப்படுத்தப்பட்டது. லீவர் பிரதர்ஸ் என்ற கம்பெனி பின்னாளில் யுனிலீவர்ஸ் (Unilever) என்று பெயர் மாற்றம் அடைந்து மிகப்பெரும் நிறுவனமாக வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சோப்பு உருவான வரலாறு


குளிப்பவர்கள் அனைவரும் ஒருமுறை படித்துத்தான் பாருங்களேன்!

Thursday, December 27, 2012

தலைமைத்துவப் பயிற்சி நாளை ஆரம்பம் முஸ்லிம் மாணவர்கள் பிரச்சினை என்ன ?

ஏ.அப்துல்லாஹ்: பாதுகாப்பு அமைச்சு மற்றும் உயர் கல்வியமைச்சு ஆகியன இணைந்து பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு வழங்கும் தலைமைத்துவப் பயிற்சி நாளை ஆரம்பமாகவுள்ளது . இம்முறை 10,000 பல்கலைக்கழக மாணவர்களுடன் முதற்கட்டப் பயிற்சி நாளை ஆரம்பமாவதாக உயர் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. மூன்று கட்டங்களாக 22 நிலையங்களில் இவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது

இதன் முதற் தொகுதியினர் எதிர் வரும் டிசம்பர் 27 முதல் 2013 ஜனவரி 12ம் திகதி வரையும் பயிற்சி பெறுவதுடன் 2ம் தொகுதியினர் 2013 ஜனவரி 16ம் திகதி முதல் 2013 பெப்ரவரி முதலாம் திகதி வரை மற்றும் மூன்றாம் தொகுதியினர் 2013 பெப்ரவரி 12ம் திகதி முதல் பெப்ரவரி 28ம் திகதி வரையும் தலைமைத்துவப் பயிற்சிகளை பெறுவர் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது .

முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இந்த முறை நிறைவேற்றப் படுமா ?

கடந்த ஆண்டு 2011 முதல் தடவையாக இராணுவ முகாம்களில் மாணவ, மாணவியருக்கு தலைமைத்துவ பயிற்சி நெறி ஆரம்பித்த போது, முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு நேரடியாக சவாலாக ஆண் பெண் கலந்த உடல் பயிற்சி , முஸ்லிம் பெண்களின் உடை , வதிவிடம் , ஐந்து வேலை தொழுகை , ஜும்மாஹ் தொழுகை, ஹலால் உணவு என்பன முஸ்லிம் மாணவ மாணவியரை பெரிதும் பாதிக்கும் பிரச்சினையாக இனம் காணப்பட்டது. அதேவளை பொதுவில் மாணவர்களுக்காக தலைமைத்துவ பயிற்சி நெறி இராணுவ முகாம்களின் நடாத்தப்படுவது பொதுவான அனைத்து மாணவ, மாணவர்களுக்குமான பிரச்சினையாக சுட்டிகாட்டபட்டது. இவற்றில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு சாதகமான தீர்வுக்கான போக்கை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வெளிப்படுத்தினார்.

அவற்றில் பல வற்றுக்கு உடனடியாக தீர்வுக்கான ஏற்பாடுகளை செய்த உயர் கல்வி அமைச்சர் ஆண்களும் பெண்களுக்கும் வேறுவேறு முகாம்களில் பயிற்சிகளை ஏற்பாடு செய்யுமாறு வேண்டியபோது ”இந்த பிரச்சினைகள் என்னிடம் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தால் ஆண்களும் பெண்களுக்கும் வேறுவேறு முகாம்களில் பயிற்சிகளை ஏற்பாடு செய்திருப்பேன் அடுத்தவருடன் ஆண்களும் பெண்களுக்கும் வேறுவேறாக பயிற்சி நெறியை ஏற்பாடு செய்தால் உங்களுக்கு சரிதானே” என்று அமைச்சரை சந்தித்த முஸ்லிம் பிரதிநிதிகளிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் கூட்டம் ஒன்றில் பேசிய உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கான அடுத்த தலைமைத்துவ பயிற்சிக்கு முன் முஸ்லிம் மாணவிகளுக்காக பிரத்தியேக தங்குமிடவசதி ஏற்பாடு செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத் தக்கது .
source-lankamuslim

தலைமைத்துவப் பயிற்சி நாளை ஆரம்பம் முஸ்லிம் மாணவர்கள் பிரச்சினை என்ன ?

ஏ.அப்துல்லாஹ்: பாதுகாப்பு அமைச்சு மற்றும் உயர் கல்வியமைச்சு ஆகியன இணைந்து பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு வழங்கும் தலைமைத்துவப் பயிற்சி நாளை ஆரம்பமாகவுள்ளது . 

நாவின் விபரீதங்கள் - பகுதி 1

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.
நாவின் விபரீதங்கள்
மூலம்: இமாம் கஸ்ஸாலி (ரஹ்)

முன்னுரை:
நாவை அடக்கியாளாதவன் உண்மை முஸ்லிமல்லன்!’என்பது பெருமானாரின் கருத்து.இந்த கருத்தை ஆதாராமாக வைத்துதான் இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. பேசுவதால் ஏற்படும் விபரீதங்களையும் துன்பங்களையும் இந்த நூல் தெளிவுபடுத்துகிறது.

“நாவின் விபரீதங்கள்” என்ற இந்த நூல் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் “அபாதுல்லியான்” என்ற அரபி நூலிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. நாவின் விபரீதங்களிலேயே மிகக்கொடியது புறம் பேசுதல். ஆனால் இந்தத் தலைப்பு இதில் இடம் பெறவில்லை. ஏனென்றால் இமாமவர்கள் முழு நீள அத்தியாயங்களுடன் அதைத் தனிப்பட்ட தலைப்பாக விளக்கியிருக்கிறார்கள். புறம் என்றால் என்ன, அதற்கு மூல காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி? என்பன போன்றவை அங்கு விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றன.

பேச்சுக்கலை வளர்ந்திருக்கும் இக்காலத்திற்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என நம்புகிறோம் இன்ஷா அல்லாஹ்.

மொழி பெயர்ப்பாளர்: ச.அப்துல் வஹ்ஹாப்

பகுதி 1 – நாவின் விபரீதங்கள்

எல்லாம் வல்ல இறைவன் நாவைக் கொடுத்திருக்கிறான் மனிதனுக்கு, இறைவனின் அன்பளிப்புகளில் அது மகத்தானது. அது சிறியதொரு சதைத் துண்டுதான், என்றாலும் அதனால் விளையும் விபரீதங்கள் தாம் எத்தனை! உருவாகும் பயன்கள் தாம் எத்தனை! அது சக்தி வாய்ந்த பொருள். உள்ளத்தின் கருத்துக்களை அதுதானே படம் பிடித்துக் காட்டுகிறது! “நல்வழியை நான் பின்பற்றி நடக்கிறேன்!” என்று சொன்னதும், “ஒதுக்கித் தள்ளுங்கள் உங்கள் இஸ்லாத்தை! எங்களுக்கு தனி மார்க்கம் உண்டு, எங்கள் முன்னோர் பின்பற்றிய மார்க்கத்தைத்தான் நாங்கள் பின்பற்றுவோம். வேறு எந்த மார்க்கமும் எங்களுக்குத் தேவையில்லை” என்று சொன்னதும் அந்தச் சிறிய சதைத் துண்டுதானே! அது உலகையும் அதிலுள்ளவற்றையும் விளக்குகிறது. கற்பனையில் உள்ளதையும் உள்ளமையில் கட்டுண்டதையும் அது கண்ணாடியில் தோன்றுவதைப் போல் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. படைப்பினங்களனைத்தும் அறிவுக்குக் கட்டுப்பட்டு விடுகின்றன. தான் அறிந்த அறிவுகள் அனைத்தையும் மனிதன் நாவில் உதவியால் மற்றவர்களுக்குக் கூறுகிறான். அது சில வேளை விண்ணகத்தையும் அளந்து பார்க்கிறது. வேறு சில சமயம் விண்மீன்களையும் வெண்ணிலாவையும் எடை போடுகிறது. இன்னும் சில சமயம் உயிரினங்களையும் அவற்றைப் படைத்த இறைவனையும் வம்புக்கிழுக்கிறது!

இந்த சதைத் துண்டுக்குள்ள ஆற்றல் மனிதனின் அவயவங்களில் வேறு எதற்கும் கிடையாது. உங்கள் கண்கள் நிறத்தையும் உருவத்தையும் பார்க்கின்றனவே தவிர, அவை நிறத்தைப் பற்றியும் உருவத்தைப் பற்றியும் விளக்கம் தருவதில்லை. கண்ணுக்குள்ள ஆற்றல்கூடக் காதுக்குக் கிடையாது. அது பார்ப்பதுமில்லை; பார்த்ததை மற்றவர்களுக்குக் கூறுவதுமில்லை. குரலையும் கீதத்தையும் கேட்கும் ஒரே ஆற்றல் அதற்குண்டு. நீங்கள் இனிய கீதத்தைக் காதால் கேட்டு இன்பமடைகிறீர்கள். ஆனால் அந்த காது கீதத்தின் இனிமையை மற்றவர்களுக்கு உணர்த்துமா? உணர்த்தாது. உணர்த்தும் ஆற்றல் மனதில் பதியப்பேசும் ஆற்றலும் நாவின் பிறப்புரிமைகள். அது தான் அனுபவித்த அறுசுவை உணவைப் பற்றிக் கூறுவதுபோல், கண்ணால் கண்டதையும், காதால் கேட்டதையும் தெளிவாக விளக்கிக் காட்டுகிறது. ஒரு குருடனுக்குக் கடலையும் நிலவையும் விளக்குகிறது. செவிடனின் உள்ளத்தில் அது கீதத்தின் இனிமையையும் திருக்குர்ஆன் ஓதும்போது கிடைக்கும் இன்பத்தையும் ஆழமாகப் பதித்து விடுகிறது. நாவு இல்லையேல் குருடன் நிலவைப் பார்க்க முடியாது. சுருங்கச் சொன்னால், வெற்று மனதோடு பிறக்கும் மனிதனுக்கு அது இறைவனைப் பற்றிய அறிவைப் போதித்து விடுகிறது.

நாவைத் தவிர்த்து மற்றப் புலன்கள் குறிப்பிட்ட எல்லையில் நின்று சுழல்கின்றன. அந்த எல்லையை அவற்றால் கடக்கமுடியாது. மல்லிகை மலரை காதுக்கருகில் கொண்டு போவதால் அதன் நறுமணத்தை நுகர முடியாது. காதுக்கு நுகரும் ஆற்றல் கிடையாது. புத்தகத்தை முகர்ந்து பார்ப்பதால் அதில் அடங்கியுள்ள கருத்துக்களை உங்களால் நுகர்ந்து கொள்ள முடியுமா? ஆனால் நாவு இப்படிக் கட்டப்பட்டதல்ல. அது எதையும் கூறும்; எப்போதும் கூறும்; எப்படியும் கூறும். கூறும் ஆற்றல் அதன் தனியுரிமை. அந்த உரிமையில் மற்றப் புலன்கள் பங்குபெற முடியாது. அது நற்காரியத்தில் ஈடுபட்டால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். தீயக் காரியத்தில் அது தலையிட்டால் சமூகமே அழிந்து விடும். ஒரு சமயம் “இறைவனே, இறைவனே என்று துதிக்கும் நாவுதானே மறு சமயம் அவன்மீது வசை பாடுகிறது. நாவைக் கட்டுப்படுத்தாதவர்கள் மறுமையில் மட்டுமின்றி இம்மையிலும் கேவலப்பட வேண்டி ஏற்படும். மனிதனின் நாவுதான் அவனுக்கு மறுமையில் பெருந்துன்பத்தைக் கொடுக்கிறது. இந்த இக்கட்டிலிருந்து நீங்கள் தப்ப எண்ணினால் உங்கள் நாவின் இயக்கத்துக்குக் கட்டுப்பாடு ஏற்படுத்துங்கள். மனம் போன போக்கில் எதையும் பேசாதீர்கள். மார்க்கத்தின் கட்டளைகளைக் கண்டிப்புடன் பின்பற்றுகிறவர்கள்தாம் நாவின் விபரீதங்களிலிருந்து தப்ப முடியும். இம்மைக்கும் மறுமைக்கும் பயன்படாத எதையும் இவர்கள் பேசமாட்டார்கள். விபரீதம் ஏற்படக்கூடிய எந்த வார்த்தையும் இவர்கள் வெளியிடமாட்டார்கள்.

பொதுவாக எந்தப் பேச்சு விபரீதத்தை உண்டாக்கும், எந்தப் பேச்சு சமாதானத்துக்கு வழி வகுக்கும் என்பதை பொதுமக்கள் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். நல்ல பேச்சையும் கெட்ட பேச்சையும் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும். அதன்பின் இந்த துறையில் உங்களுக்கு வெற்றி கிட்டலாம். அவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையென்றால் ஏற்படும் விபரீதங்களைப் பற்றி இப்போது ஒன்றும் சொல்ல முடியாது. நன்கு தெரிந்தவர்களே தடுமாறிக் கொண்டிருக்கும் போது ஒன்றும் தெரியாதவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். மனிதன் வெளியுறுப்புக்களில் மிகக்கொடியது நாவு. மற்ற உறுப்புக்களைப் போல் இது அடிக்கடி சோர்வு கொள்வதில்லை. நினைத்த மாத்திரத்தில் நினைத்த விஷயத்தைப் பற்றிப்பேசும் திறனுள்ளது இது. எத்தகைய சிரமமுமில்லாமல் இது இயங்க ஆரம்பித்து விடும். நல்ல காரியத்தில் சில வேளை நாவு பொறுமை காட்டினாலும் கெட்ட காரியத்துக்கு அது என்றைக்கும் தயங்காது. மற்றவர்களின் மர்மங்களையெல்லாம் சந்திக்கும் இழுக்கும் நாவு அதில் எத்துணை இனிமையக் காண்கிறது! பொய்யுரைப்பதில் அவதூறு பேசுவதிலும் அது எத்துணை இன்பம் அடைகிறது! எச்சரிக்கிறேன். அதை அசட்டை செய்து விடாதீர்கள். அதன்பின் அதனால் ஏற்படும் துன்பத்தையும் அவமானத்தையும் உங்களால் தாங்க முடியாது. எதையேனும் பேசிக் கொண்டிருப்பதை விட மௌனம் சாதிப்பது மிகச் சிறந்தது என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. தேவையில்லாமல் நீங்கள் எதையும் கூறவேண்டாம். தேவை ஏற்பட்டால் தேவைக்கதிமாகப் பேசவேண்டாம். எதையும் அலசி ஆராய்ந்து பாருங்கள். மார்க்கத்திற்கு முரண்பட்டதையும் விபரீத விளைவுகளை உருவாக்கக் கூடியதையும் நீங்கள் பேசாதீர்கள். சிந்தனைக்கும் மௌனத்துக்கும் உங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுங்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

நாவின் விபரீதங்கள் - பகுதி 1

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.
நாவின் விபரீதங்கள்
மூலம்: இமாம் கஸ்ஸாலி (ரஹ்)

முன்னுரை:
நாவை அடக்கியாளாதவன் உண்மை முஸ்லிமல்லன்!’என்பது பெருமானாரின் கருத்து.

Monday, December 24, 2012

தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு இடமாற்றம்


நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளிற்கான ஆசிரியர் இடமாற்றம் கடந்த வாரத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த 20 ஆண்டுகளாக ஒரே தேசிய பாடசாலைகளில் கடமையாற்றிய 3,100 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை 10 வருடங்களிற்கு அதிக காலமாக ஒரே தேசிய பாடசாலையில் கடமையாற்றிய 9,300 ஆசிரியர்கள் இடமாற்றப்படவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 343 தேசிய பாடசாலைகள் உள்ளன. இப்பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களிற்காக இதுவரையில் இடமாற்றம் செய்யப்படவில்லை என அவ் அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாணமட்ட பாடசாலைகளில் ஐந்து வருடங்களிற்கு ஒரு தடவை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

Sunday, December 23, 2012

ISLAMIC MEDICINE ONLINE

Click here please to know more about Dr.Sharif ...........  لتتعرف على د. شريف كف الغزال من فضلك إضغط على الصورةDr.Sharif Kaf Al-Ghazal
Plastic Surgeon
England
www.welcome.to/islamic.medicine

Saturday, December 22, 2012

மனப்பாடம்' செய்யாதீர்கள்...'மனப்படம் செய்யுங்கள்!

நினைவாற்றல்... இது நமக்கான பெரும் வரப்பிரசாதம். நம்முடைய தேர்வு அமைப்புகளும், பணித்திறனும், நடைமுறை வாழ்க்கையும் நினைவாற்றல் திறனின் மேம்பாட்டுக்கு ஏற்றவாறே அமைந்துள்ளன... சிறப்பு பெறுகின்றன!
இங்கே, பள்ளி பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, நினைவாற்றல் திறனுக்கான நடைமுறை குறிப்புகளை தருகிறார், சர்வதேச நினைவாற்றல் பயிற்சியாளர் ஜான் லூயிஸ்.


17 வருடங்கள் முதுநிலை ஆசிரியராக இருந்து, தற்போது 5 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்களுக்காக நினைவாற்றல் பயிற்சியளித்து வரும் ஜான் லூயிஸ், நான்கு முறை உலக நினைவாற்றல் சாம்பியன்ஷிப் வென்ற ஒரே இந்தியர். நினைவாற்றலை உரசிச் சொல்லும் 'ரூபிக் க்யூப்’ போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். அடிப்படையில் ஆசிரியர் என்பதால், தனது அனுபவத்தை ஒட்டிய அற்புதமான நினைவாற்றல் உத்திகளை உதிர்க்கிறார்.


''படிப்பது, படித்தவற்றை மனதில் இருத்துவது, பிற்பாடு பரீட்சைக்காக மீண்டும் நினைவுகூர்வது... இதுதான் நினைவாற்றலை வலுப்படுத்தும் மூன்று முக்கிய நிலைகள். இதில் சில அடிப்படைகளை புரிந்து கொண்டால்... நினைவாற்றல் கலை என்பது சுலபமாவதோடு, சுவாரஸ்யமாகவும் கைவந்துவிடும். படிப்பதற்கு முன்பாக, படிக்கும்போது, படித்த பிறகு என மூன்று கட்டங்களாக இவற்றைப் பார்க்கலாம்.


படிப்பதற்கு முன்பாக..!
படிக்க அமர்வதற்கு முன்பாக, முதலில் மனதளவில் தயாராக வேண்டும். அந்த தயார்படுத்துதல் சுய ஆர்வத்துடன் நிகழ வேண்டும். மேற்படிப்பாக எதைப் படிக்கப் போகிறோம், படித்து என்ன வேலைக்கு செல்லப் போகிறோம், எந்த மாதிரியான சாதனைகளை செய்யப் போகிறோம், எவ்வளவு வசதி வாய்ப்புகளுடன் நலமாக வாழப் போகிறோம் என ஏற்கெனவே கற்பனை செய்திருப்பவற்றை, சில விநாடிகள் நினைத்துப் பார்ப்பது, அதற்கு உதவும். இவற்றை ஒரு சந்தோஷ சபதமாக மனதுக்குள் அல்லது கண்ணாடி முன்பாக சொல்லிவிட்டு படிக்க அமரலாம்.


வீட்டில் தினமும் ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பது நல்லது. அந்த இடம் போதுமான காற்றோட்டம் பெற்றிருப்பதோடு, டி.வி, வாகன இரைச்சல் குறைவானதாகவும் இருக்க வேண்டும். பாடம் தொடர்பான அனைத்துப் பொருட்களையும் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். மூளையின் ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு அத்தியாவசிய மானது தண்ணீர் என்பதால், வாட்டர் பாட்டிலும் உடன் இருக்கட்டும். சற்று முன்பாகத்தான் டி.வி, அரட்டை போன்றவற்றிலிருந்து திரும்பியிருப்பின், கவனத்தை ஒருமுகம் செய்ய புதிர்களைத் தீர்ப்பது, சுடோகு போன்றவற்றில் இரண்டொரு நிமிடங்களை வார்ம் - அப் செய்யலாம்.


படிப்பதற்கான நேரம் ஒவ்வொருவருக்கும் ஏற்ப காலை, மாலை, இரவு என அமையலாம். ஆனால், தினசரி அதேநேரத்தில் படிப்பது நல்லது. ஒரு சிட்டிங்கில் சேர்ந்தாற்போல 50 நிமிடங்கள் படிப்பதை மட்டுமே மூளை தொடர்ந்து கிரகிக்கும். அதற்கு ஏற்றவாறு பாட அளவை திட்டமிட்டு அமர வேண்டும்.


படிக்கும்போது..!
முதல் முறையாக ஒரு பாடத்தைப் படிக்கிறோம் என்றால், கவனம் அவசியம். வகுப்பில் நடந்த பாடத்தை அல்லது செய்முறையை மனதில் ஒருமுறை படரவிட்டு, கையில் பென்சிலுடன் முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிட்டவாறே வாசிப்பைத் தொடர வேண்டும். இரண்டாம் முறை படிக்கும்போது அடிக்கோடிட்ட முக்கிய வார்த்தைகளை மட்டும் ஒன்றுக்கொன்று வரிசையாகத் தொடர்புபடுத்தி மனதுக்குள் இருத்திக்கொள்ள வேண்டும்.


படிப்பது என்றாலே மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என சகல தரப்பினரும் நினைப்பது... மனப்பாடம் செய்வதைத்தான். ஆனால், அடிப்படைக் கூறுகள் தவிர்த்து, மற்றவற்றை மொட்டையாக மனப்பாடம் செய்தால்... அவை மனதில் தங்காது. பாடத்தைப் புரிந்துகொண்டு, உணர்ந்து, காட்சிப்படுத்தி, அவற்றின் பொருளோடு படிக்கும்போதுதான் அவை மனதில் தங்கும். அதாவது, மனப்பாடம் செய்யாதீர்கள்... மனப்படம் செய்யுங்கள்!


காட்சிப்படுத்துதல் என்பது எளிமையாகவும், மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு 'அந்தமான் நிக்கோபார்’ என்பதை அந்தமான்+நிக்குது+பார் என்றும், 'எத்தியோப்பியா’வை எத்தி+உதப்பியா, 'என்சைக்ளோபீடியா’வை என்+சைக்கிளை+பிடிய்யா என்றும் ஆரம்பித்து, அர்த்தமற்ற வார்த்தைகளுக்கும் பெயர்சொற்களுக்கும்கூட அர்த்தமுள்ள ரைமிங் மற்றும் பஞ்ச் டயலாக்குகளை பயன்படுத்தலாம்.
இவற்றை காட்சிப்படுத்திக் கொள்வதும் அவசியம். இதற்கு இரண்டு வழிகள் உதவும். முதலாவது, PLAYV (Picture, Location, Association, funnY, Visualisation) மெத்தட். அதாவது, பாடத்தை, அது தொடர்பாக மனதில் தோன்றும் படத்தை, அடுத்தடுத்த கருத்துக்களை ஒன்றோடு ஒன்றாக தொடர்புப்படுத்தி, வேடிக்கையாக காட்சிப்படுத்திக் கொள்வது. இதை சுவாரஸ்யமாக்க, கார்ட்டூன் உத்தி உதவும். எதையும் மிகைப்படுத்தி பிரமாண்டமாகவும், வண்ணங்களோடும், கவர்ச்சிகரமாகவும் கற்பனை செய்துகொள்ளலாம். இது பொதுவான வாசிப்புக்கு உதவும்.


கடினமான புதிய வார்த்தைகளை மனதில் இருத்த AMPM (Alternative, Meaningful, Personalize, Mental picture) மெத்தட் கை கொடுக்கும். அதாவது, பாடத்திலிருந்து மாறுபட்ட, அதேசமயம் அர்த்தமுள்ள, தனிப்பட்ட விதத்தில், மனப்படமாக இருத்திக்கொள்ளுதல். உதாரணத்துக்கு, ஃப்யூஜியாமா (Fujiama) என்ற மிகப்பெரும் எரிமலையின் பெயரை ஞாபகம் வைத்துக்கொள்ள, எங்கள் உறவினரான பிஜி என்ற பெண்மணி, ஒரு எரிமலை மீது நின்று கொண்டிருப்பதைப் போல கற்பனை செய்துகொண்டான் என் மகன். இதையே இன்னொரு மாணவன் தனக்குப் பிடித்த உடையான பைஜாமா அணிந்துகொண்டு, அவனே எரிமலை அருகில் நிற்பதாக கற்பனை செய்து, அந்த வார்த்தையை மனதில் பதிய வைத்துக் கொண்டான். இப்படி கற்பனை, காட்சிப்படுத்துதல் எதுவானாலும் அதில் ஒரு பர்சனல் டச் இருப்பின் அது நினைவுப் பெட்டகத்திலிருந்து எளிதில் அழியாது.


அடுத்ததாக, கண்ணுக்கான 20 X 20 டெக்னிக். மனித கண்ணின் தொடர்ச்சியான உழைப்பு ஒரு சமயத்தில் 40 நிமிடங்கள் மட்டுமே. எனவே, 20 நிமிட படிப்புக்கு பிறகு, 20 விநாடிகள் இடைவெளிவிட்டு, அந்நேரத்தில் 20 மீட்டர் தொலைவிலிருக்கும் ஏதேனும் பசுமையான இயற்கையான விஷயங்களின் மீது பார்வையை ரிலாக்ஸ் செய்துவிட்டு, பாடத்துக்குத் திரும்பலாம். இப்போது 20 நிமிடங்கள் படித்ததன் குறிப்புகளை இரண்டு நிமிடங்களில் திருப்பிப் பார்த்துவிட்டு, அடுத்த 20 நிமிட சுழற்சியை மேற்கொள்ள வேண்டும். இப்படி இரண்டு சுற்றுகள் முடித்ததும்... அடுத்த 40 நிமிட அமர்வுக்கு முன்பாக 10 நிமிட பிரேக் அவசியம். ஆக, இப்படியான இடைவெளிகள் ஒரு மணிக்கு ஒருமுறை என்பதாக அமைந்துவிடும்.


படித்த பிறகு..!
எவ்வளவு படித்தாலும் அவை மூளையின் நிரந்தரப் பதிவாக மாற, ரிவிஷனில் இருக்கிறது சூட்சமம். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, படித்த பாடம் அடுத்த 24 மணி நேரத்தில் 40% மறதிக்குள்ளாகிறது. இப்படியே விட்டால்... 21 நாட்களில் குறிப்பிட்ட பாடத்தை படித்ததற்கான சுவடே இருக்காது. எனவேதான் நம்முடைய பாரம்பரியத்தில் ஒரு பழக்கத்தை வழக்கமாக மாற்றிக் கொள்ள, 21 நாள் பயிற்சி மேற்கொள்ளலை வைத்திருக்கிறார்கள்.


ரிவிஷனில் இந்த 4 நிலைகளைப் பின்பற்றுங்கள். முதல் நாள், 3-வது நாள், 7-வது நாள், 30-வது நாள் என்ற கணக்கில், ஆங்கிலம், அறிவியல் என ஒவ்வொரு பாடத்தையும் தினசரி நான்கு விதமாக திருப்பிப் பார்க்கவேண்டும். 'தினசரி வீட்டுப்பாடம், கிளாஸ் டெஸ்ட் இவற்றுக்கான நேரமே தடுமாற்றமாகும்போது தினசரி நான்கு ரிவிஷன்களா?' என மிரள வேண்டாம். படிப்பதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்ட பாடம், முதல் ரிவிஷனுக்கு 10 நிமிடமே எடுத்துக்கொள்ளும். அடுத்தடுத்த ரிவிஷன்கள் மேலும் குறைவான நிமிடங்களில் முடிந்துவிடும். மேலும் இந்த ரிவிஷனை கடினமான பாடங்களை முதல்முறை படிக்கும்போது இடையிடையே மேற்கொள்ளலாம்; அல்லது தூங்குவதற்கு முன்பாகவோ பயணத்தின்போதோ, காத்திருப்பின்போதோகூட மேற்கொள்ளலாம். சிலர் எதற்கெடுத்தாலும் எழுதிப் பார்ப்பார்கள். இது ரிவிஷனுக்கான நேரத்தைச் செரித்துவிடும். எட்டாம் வகுப்புக்கு மேல் கடினமான பாடப் பகுதிகளை மட்டுமே எழுதிப் பார்த்தால் போதுமானது.


ஆயத்தம், படித்தல், திருப்பிப் பார்த்தல் இவற்றோடு... க்ளைமாக்ஸான பரீட்சை தினத்தையும் அவ்வப்போது மனக்காட்சியில் வெற்றிகரமாக பலமுறை டிரெயிலராக ஓட்டிப்பார்ப்பது நல்லது. இது கடைசி நேர தடுமாற்றங்களை தவிர்க்கச் செய்யும்.
இவை தவிர்த்து, அத்தியாவசிய தூக்கம், உணவு, ரிலாக்ஸாக்கும் உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தினசரி குறைந்தது 2 லிட்டர் தண்ணீர்... இவற்றையும் மறந்துவிட வேண்டாம்!

2013ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைகள்!


2013 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளுக்கான தவணை அட்டவனையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

முதலாம் தவணை ஜனவரி 2 தொடக்கம் ஏப்ரல் 5 வரை, இரண்டாம் தவணை ஏப்ரல் 22 தொடக்கம் ஆகஸ்ட் 2 வரை ,மூன்றாம் தவணை செப்டெம்பர் 2 தொடக்கம் டிசம்பர் 2 வரையுமாகும்.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைக்களுக்குரிய முதலாம் தவணை ஜனவரி 2 தொடக்கம் ஏப்ரல் 9 வரை, இரண்டாம் தவணை ஏப்ரல் 17 தொடக்கம் யூலை 5 வரை, மூன்றாம் தவணை ஆகஸ்ட் 12 தொடக்கம் டிசம்பர் 6 வரை என கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைகள்!

O/L விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிகள் இம் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பம்இவ்வாண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தர தர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி இம்மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நாடளாவிய ரீதியில் 78 பாடசாலைகளில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Thursday, December 20, 2012

Chemistry GCE A/AS