அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Saturday, January 12, 2013

செயற்கை ரத்தம் தயார்! சென்னை மாணவர்களின் அசத்தல் !


இப்போதெல்லாம் சாலை போன்ற விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.அப்படி விபத்து ஏற்படும் நேரங்களில் நிலவும் ரத்தப் பற்றாக்குறையை நீக்கும் வகையில் செயற்கை ரத்தத்தை உருவாக்க கடந்த மூன்றாண்டுகளாக முயன்று வந்த சென்னை ஐ.ஐ.டி.விஞ்ஞானிகள் தற்போது சாதனை படைத்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகைக்கு ஏற்ப ஆண்டு தோறும் 12 மில்லியன் யூனிட் ரத்தம் தேவை உள்ளது. ஆனால் ஒன்பது மில்லியன் அளவிற்கு மட்டுமே ரத்தம் கிடைத்து வருகிறது. இந்த நிலையை மாற்றும் முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மூன்றாண்டுகளாக இம் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.விஞ்ஞானிகளின் முயற்சிக்கு மத்திய அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதி ஒதுக்கியது.

இதனையடுத்து ஐ.ஐ.டி நிறுவனத்தின் டாக்டர் சோமா குகதகுர்தா தலைமையிலான , குழுவினர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தற்போது வெற்றியடைந்துள்ளனர். இது குறித்து டாக்டர் சோமா கூறுகையில் அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து ரத்த வங்கிகளிலும் செயற்கை ரத்தம் எளிமையாக கிடைக்கும் என தெரிவித்தார்.

இந்த செயற்கை ரத்தம் தயாரிப்பு சோதனை குறித்து விளக்கம் அளித்த டாக்டர் சோமா,”” ரத்தம் தேவைப்படுபவரின் ஸ்டெம் செல்களில் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு தேவையான ரத்த செல்கள் தயாரிக்கப்படும். இந்த செயற்கை ரத்தம், ரத்த வங்கிகளில் இருந்து வாங்கும் ரத்தத்திற்கு ஆகும் செலவில் பாதி மட்டுமே ஆகும்.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள செயற்கை ரத்தம் விலங்குகளில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு மனிதர்களில் சோதனைக்கு உட்படுத்தப்படும்; இதன் மூலம் விபத்துக்களின் போது போதிய ரத்தம் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புக்கள் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது; இறுதி கட்ட சோதனைகள் வெற்றி பெற்ற பிறகு செயற்கை ரத்தத்தை பெருமளவில் தயாரிக்க ஐ ஐ டி.,யின் பயோ டெக்னாலஜி துறை முடிவு செய்துள்ளது.

இது வரை ரத்த வெள்ளை அணுக்களை 40 சதவீதம் உற்பத்தி செய்யும் சோதனைகளே நடைமுறையில் இருந்து வந்தது; ஆனால் இந்த செயற்கை ரத்தம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும், பாதுகாப்பான அதே சமயம் நோய் தொற்று இல்லாததாகவும் இருக்கும்; அறுவை சிகிச்சைகளின் போதும் இவற்றை பயன்படுத்த முடியும்”’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.