அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Sunday, January 13, 2013

புலமைப்பரிசில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் தரம் ஐந்து புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதால் இனி புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை ஏழாயிரமாக அதிகரிக்கப்படும்.

இதுவரை காலமும் ஐயாயிரம் பேருக்கே இந்த புலமைபரிசில் வழங்கப்பட்டு வந்தன .ஜனாதிபதியின் பணிப்புரையடுத்து இனிமேல் இத்தொகை மேலும் இரண்டாயிரத்தால் அதிகரிக்கப்படுகின்றது.

ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு ஜனாதிபதி இதற்கான ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுவரை காலமும் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் போது 15 ஆயிரம் ரூபா புலமைப்பரிசில் தொகை வழங்கப்படுவதற்காக 105 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு தரம் ஐந்து புலமைப் பரிசில் வழங்கும் நடைமுறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழில் மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.