அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Friday, June 29, 2012

தென்கிழக்கு பல்கலையில் விரைவில் பொறியியல் பீடம்; அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உறுதி!

 தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சகல வசதிகளும் கொண்ட பொறியியல் பீடம் விரைவில் நிறுவப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். 
பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியை விரிவுரையாளர்கள் சிலர் எதிர்ப்பதானது அவர்களது மனநலக்
குறைபாட்டின் வெளிப்பாடே என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா  ஒலுவில் வளாக பல்கலைப் பூங்காவில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவற்றைத் தெரிவித்தார். பல்கலைகலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஏ.எம்.இஸ்ஹாக் தலைமையில், பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் முன்னிலையில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், எஸ்.எஸ்.பி.மஜீத் மற்றும் ஏ.எம்.நௌசாத் உட்பட அரசியல் பிரமுகர்களும் சிவில் சமூக பிரதிநிதிகளும் தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.ஏ.சத்தார் உட்பட பல்கலைக்கழக பீடாதிபதிகள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.இப்பட்டமளிப்பு விழாவில் விஞ்ஞானம், கலை, வர்த்தகம் மற்றும் வணிக முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த 454 உள்வாரி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் இதன்போது தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் இலக்கிய கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜெயந்த நவரட்ன பட்டமளிப்பு பேருரையை நிகழ்த்தினார்.