
இதன்பிரகாரம் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் தரம் ஆறு முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களுக்கு மடிக் கணணிகளை பயன்படுத்தி கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
இது தொடர்பான முதற்சுற்று பேச்சுவார்த்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றுள்ளது.
உத்தேச திட்டத்திற்காக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் கணணி உற்பத்தி நிலையம் ஒன்றை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இத்தகையதொரு திட்டத்தை செயற்படுத்தும் ஆசிய நாடு என்ற வகையில் கல்வித்துறை அடையும் மிகப்பெரிய வெற்றி என தெரிவித்துள்ளார்